காதலியின் கணவனிடமிருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த இளைஞன் மரணம்!

காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க முயன்று 5-வது மாடியின் பால்கனியில் இருந்த குதித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2021, 09:24 PM IST
காதலியின் கணவனிடமிருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த இளைஞன் மரணம்! title=

ஜெய்ப்பூர் : காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க முயன்று 5-வது மாடியின் பால்கனியில் இருந்த குதித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உத்தர பிரதேசம் மாநிலத்திலுள்ள நைனிடாலை சேர்ந்தவர் மொஹ்சின்(29).  இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.  இதனையடுத்து இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்ததையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

ALSO READ | பாலின பாகுபாடற்ற சீருடையில் மாணவர்கள்!

அந்த திருமணமான பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது, அந்த குழந்தையையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு மொஹ்சினும் அவருடைய காதலியும் நைனிடாலை விட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியேறி, ராஜஸ்தான் மாநிலம் ஜெப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு இடம்பெயர்ந்து வசித்து வந்தனர்.

இவர்கள் காணாமல் போனதிலிருந்தே அந்த பெண்ணின் கணவர் தனது மனைவியையும், குழந்தையையும் பல இடங்களில் தேடி அலைந்து கொண்டு இருந்தார்.  அதனையடுத்து இவர்கள் ஜெய்ப்பூரில் இருக்கும் தகவல் அவருக்கு கிடைத்ததை தொடர்ந்து மனைவியையும், மகளையும் தேடி மொஹ்சினுடன் அவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்தார்.

தன் காதலியின் கணவர் வந்ததை அறிந்த மொஹ்சின் பதட்டமடைந்து என்ன செய்வதென்று அறியாமல் அச்சத்தில் உறைந்து போனார்.  பின்னர் அவரிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று எண்ணிய வர் தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியின் பால்கனியில் இருந்து கீழே குதித்துவிட்டார்.  இதனையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள SMS மருத்துவமனையில் சேர்த்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பிரதாப் நகர் காவல் நிலைய போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மொஹ்சினின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.  போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மொஹ்சினுடன் வசித்து வந்த பெண், அவரது கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ALSO READ | பெண்களின் திருமண வயதில் மாற்றம்! அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் சட்டம் விரைவில்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News