பெண்ணை பலாத்காரம் செய்து காரை ஏற்றிக் கொலை செய்த 7 பேர் கொண்ட கும்பல்

Last Updated : May 13, 2017, 06:27 PM IST
பெண்ணை பலாத்காரம் செய்து காரை ஏற்றிக் கொலை செய்த 7 பேர் கொண்ட கும்பல் title=

நிர்பயாவிற்கு நடந்ததை போல மீண்டும் ஒரு சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலம் ரோக்தாக் பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் போலீசார் கூறுகையில், கடந்த 9-ம் வேலைக்கு சென்ற போது 7 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காரை ஏற்றி கொலை செய்யப்பட்டு உள்ளார் என கூறினர்.

நிர்பயாவிற்கு நடந்ததை போல கொடூரமான செயல் மீண்டும் நடந்துள்ளதால் மக்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Trending News