பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை! இந்த மாநிலத்திற்கு High Alert!

இமாச்சல பிரதேசத்தில், சுமார் 1,800 புலம்பெயர்ந்த பறவைகள், அவற்றில் பெரும்பாலானவை பார்-தலை வாத்துக்கள், பாங் அணை ஏரி சரணாலயத்தில் இறந்து கிடந்தன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2021, 11:55 AM IST
பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை! இந்த மாநிலத்திற்கு High Alert! title=

சிம்லா: ராஜஸ்தான், கேரளா மற்றும் மத்திய பிரதேசத்திற்குப் பிறகு பறவைக் காய்ச்சல் பாதிப்புகளைப் புகாரளிக்கும் நான்காவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் ஆனது, காங்க்ரா மாவட்டத்தின் பாங் அணை ஏரியில் புலம் பெயர்ந்த பறவைகள் இறந்து கிடந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தில் (Himachal Pradesh), சுமார் 1,800 புலம்பெயர்ந்த பறவைகள், அவற்றில் பெரும்பாலானவை பார்-தலை வாத்துக்கள், பாங் அணை ஏரி சரணாலயத்தில் இறந்து கிடந்தன. ராஜஸ்தானில், சில மாவட்டங்களில் இருந்து திங்களன்று 170 க்கும் மேற்பட்ட புதிய பறவைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன, சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மொத்த இறப்புகள் 425 க்கும் அதிகமானவை.

ALSO READ | தீவிரமடையும் பறவைக் காய்ச்சல்; கேரள கோழிகள் தமிழகம் வர தடை!

இந்த பறவைக் காய்ச்சல் (Bird flu) கேரளாவில் (Kerala) பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென செத்து மடிந்தன. இதனால் இறந்த வாத்துகளில் இருந்து எட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித்ததில் “H5N1” வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவைக்காய்ச்சலால் (Bird flu) இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டாரத்தில் ஒரு Km தொலைவில் உள்ள கோழி மற்றும் வாத்துகள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் ஆலப்புழா கோட்டயத்தில் பரவிய பறவை காய்ச்சல் (Avian Influenza) தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி, வாத்துக்களின் முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளா எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கால்நடை துறை இயக்குநர் ஞானசேரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ALSO READ | COVAXIN தடுப்பூசி 200% பாதுகாப்பானது; இதன் வீரியம் 1 வருடம் வரை நீடிக்கும்!

மேலும், குமரி, தென்காசி ,தேனி ,திருப்பூர், கோவை ,நீலகிரி உள்ள 26 சோதனை சாவடிகள் கண்காணிப்பு தேவை என்றும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு குளோரின் -டை -ஆக்சைடு தெளிக்க வேண்டும் என்றும் ஞானசேரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தூரில், 15 காகங்கள் இறந்து கிடந்தன, 12 காகங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. நகரின் டெய்லி கல்லூரி அருகே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பகுதிகளில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்தூர் மிருகக்காட்சிசாலையும் அதிக எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.

பறவைக் காய்ச்சல் என்பது H5N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படும் பறவைகளில் மிகவும் தொற்று மற்றும் கடுமையான சுவாச நோயாகும், இது எப்போதாவது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News