மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இயலாத பாஜகவுக்கு மேலும் ஒரு தோல்வி

இது பாஜகவுக்கு பெரிய பின்னடைவு. இரண்டு பாஜக கவுன்சிலர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். லாத்தூர் மாநகராட்சியில் பெரும்பான்மை இருந்தபோதிலும், பாஜக அதிகாரத்தை இழந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2019, 04:12 PM IST
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இயலாத பாஜகவுக்கு மேலும் ஒரு தோல்வி title=

லாதூர்: மகாராஷ்டிராவில் உள்ள லாத்தூர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜக (BJP) தோல்வியடைந்தது. லாதூர் மாநகராட்சியில் பாஜக பக்கம் 70 கவுன்சிலர் பெரும்பான்மை இருந்தபோதிலும், மேயர் தேர்தலில் பாஜக தோல்வியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு கவுன்சிலர்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் விளைவாக பாஜவுக்கு தோல்வி முகம் ஏற்பட்டு உள்ளது.

மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலை உருவானதை அடுத்து, இப்போது உள்ளாட்சி அமைப்புகள் பாஜகவின் அதிகாரத்தில் தாக்கத்தை காட்டத் தொடங்கியுள்ளன. மகாராஷ்டிராவில் இன்னும் இரண்டரை ஆண்டு மேயர் பதவி காலம் உள்ளது. அதற்கு முன்பாகவே பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு லாத்தூர் மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அப்போது பாஜக 36 இடங்களை வென்றது, காங்கிரஸ் பக்கம் 33 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்தனர். மேயர் பதவியையும் பாஜக வென்றது. 

இன்று (வெள்ளிக்கிழமை) மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விக்ராந்த் கோஜ்முண்டே 35 வாக்குகளைப் பெற்றார். அதேவேளையில் பாஜகவின் ஷைலேஷ் கோஜ்முண்டேக்கு 33 வாக்குகள் கிடைத்தன.

இது பாஜகவுக்கு பெரிய பின்னடைவு. இரண்டு பாஜக கவுன்சிலர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். லாத்தூர் மாநகராட்சியில் பெரும்பான்மை இருந்தபோதிலும், பாஜக அதிகாரத்தை இழந்துள்ளது.

தற்போது மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இல்லை, சிவசேனா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் என்சிபி ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காராஷ்டிராவில், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைப்பதில், சிவசேனா உறுதியாக உள்ளது. தேசியவாத காங்கிரசோடு இணைந்து சிவசேனாவை ஆதரிக்க, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.இதனை நேற்று மும்பையில் நடைபெற்ற தேசியவாத காங்கிரசுடனான ஆலோசனைக்குப் பின், மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து, நேற்று நள்ளிரவில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, அவரது மகன் ஆதித்யா தாக்ரே, அக்கட்சி எம்.பி சஞ்சய் ராவத் ஆகியோர், தெற்கு மும்பையில் உள்ள "சில்வர் ஓக்" இல்லத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசினர். அப்போது, கூட்டணி ஆட்சி, சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி, எக்கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி, எந்தெந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள் பதவி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நள்ளிரவு ஆலோசனை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இந்த சூழ்நிலையில், இந்நிலையில், மகாராஷ்டிராவில் அமைய உள்ள புதிய ஆட்சியில், 5 ஆண்டுகளுக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக  இருப்பார் என சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும், 5 ஆண்டுகளுக்கும்  சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக இருப்பார். சுழற்சி முறையில் முதல்வர் பதவி இருக்காது எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

இன்று மகாராஷ்டிரா கூட்டணி மற்றும் புதிய ஆட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News