EPFO பயனாளர்களுக்கு குட் நியூஸ்! மூன்று மடங்கு அதிகரிக்கும் ஓய்வூதியம்!

EPFO: ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை தற்போது 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 22, 2022, 06:21 AM IST
  • குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1,000 ரூபாயில் இருந்து 3,000 மாக உயர்த்தலாம்.
  • இபிஎஃப்ஓ-ன் 5 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2020-21 நிதியாண்டில், இபிஎப் மீதான வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது.
EPFO பயனாளர்களுக்கு குட் நியூஸ்! மூன்று மடங்கு அதிகரிக்கும் ஓய்வூதியம்! title=

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது இபிஎஃப்ஓ ​​கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை வழங்கவிருக்கிறது.  இதுகுறித்து வெளியான சில செய்திகளின்படி, குறைந்தபட்ச ஓய்வூதியம் (இபிஎஃப்ஓ) மூன்று மடங்கு அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது, மேலும் இபிஎஃப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 3 மடங்கு உயர்த்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன்மூலம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை தற்போது 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? அறிவிப்பு எப்போது? 

இந்த விவகாரத்தில் தொழிலாளர் செயலாளர் தலைமையிலான குழு விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 6.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ​​இபிஎஃப்ஓ-ன் 5 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில் நிதி அமைச்சகம் 2021-22 நிதியாண்டிற்கான 8.1 சதவீத வட்டி விகிதத்தை அறிவித்தது, இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சந்தாதாரர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது, இது நான்கு டீகேட்களில் மிகக் குறைந்த அளவாகும்.  2020-21 நிதியாண்டில், இபிஎப் மீதான வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது, அரசாங்கத்தின் இந்த முடிவின் தாக்கம் 65 மில்லியன் சந்தாதாரர்கள் அதாவது 6.5 கோடி வேலை தேடுபவர்கள் மீது இருக்கும்.  

குறைந்து வரும் வட்டி விகிதத்திற்கு மத்தியில் இபிஎப்ஓ ​​நிதியில் இருந்து பங்குச் சந்தையில் முதலீட்டின் வரம்பை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.  கடன் நிதிகள் தேவையான வருமானத்தைப் பெறவில்லை அதனால் பங்குகளில் முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் வருவாயைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இந்த முன்மொழிவை பரிசீலிக்க நிதி முதலீடு மற்றும் தணிக்கை குழுவின் முக்கியமான கூட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.  ஜூன் கடைசி வாரத்தில் அறங்காவலர்களின் மத்திய குழுவின் கூட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஆண்டுக்கு ரூ. 96,000 உயரப்போகும் அரசு ஊழியர்களின் சம்பளம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News