ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 100% கேஷ்பேக் சலுகையை அறிவித்தது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனமும் 100% கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகையாக புதிய தண் தணா தண் சலுகையின் கீழ் ரூ.399 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100% கேஷ்பேக் சலுகையை வழங்கிவருகிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 திட்டத்தின் கீழ் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் பல ஆபர்கள் அறிவித்துள்ள வரும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் சூப்பர்வீக் என்ற சலுகையை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் ரூ.69 கட்டணத்தில் 7 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானில் வரம்பற்ற கால் அழைப்புகளை வழங்குகிறது. தினசரி 500 எம்பி டேட்டா பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த திட்டத்தில் ரூ.69 முதல் ரூ.73 வரை வாடிக்கையாளர் வட்டங்களை பொறுத்து கட்டணம் மாறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நேற்று ரிலையன்ஸ் ஜியோ புதிய ’தத் தாணா தான்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!
இன்று (அக்டோபர் 19) முதல் இத்திட்டம் சந்தைப்படுத்தப்படுகின்றது.
இத்திட்டத்தின்படி:-
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச ஜியோ போன் புக்கிங் மீண்டும் தொடங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக 1500 ரூபாய் வைப்பு இருப்பு தொகையின் அடிப்படையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போனினை அறிமுகம் செய்தது. இதற்கனா முன்பதிவு கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.
ஜியோவின் இந்த திட்டமும் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இதன் இரண்டாவது கட்ட ஜியோ போன் புக்கிங் தொடங்க உள்ளது.
அதனால் தீபாவளிக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது கட்டமாக ஜியோ போன் விற்பனைக்கான புக்கிங் தொடங்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தண் தணா தண் சலுகையின் கீழ் ரூ.399 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இந்த கேஷ்பேக் அனைத்து பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி கூப்பன்களாக வழங்கும். இவற்றை அடுத்த 5 ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும்.
ஜியோ தீபாவளி சலுகை அக்டோபர் 12-ம் தேதி துவங்கி அக்டோபர் 18-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
தீபாவளி சலுகையை பெற ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 மதிப்புள்ள எட்டு சலுகை கூப்பன்கள் (மதிப்பு ரூ.400) வழங்கப்படுகிறது.
டெலிகாம் நிறுவனுங்கள் அனைத்தும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு புதுத்திட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான திட்டம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி ரூ.149-க்கு வரம்பற்ற டேட்டா திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது!
இத்திட்டத்தின்படி ரூ.149 செலுத்தினால் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் கீழ், 2 GB டேட்டாவினை 4G வேகத்திலும் அதன்பின் 64kbps வேகத்திலும் வரம்பற்ற டேட்டாவினை பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனின் முதற்கட்டமாக முன்பதிவு செய்த சுமார் 60 லட்சம் பேருக்கும் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜியோபோன் முன்பதிவு செய்தோருக்கு அக்டோபர் 19-ம் தேதிக்குள் விநியோகம் செய்யப்படும் என ரிலையனஸ் ஜியோ டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது. அதில்,
எங்களை தொடர்பு கொண்டமைக்கு நன்றி, எவ்வித இடர்பாடுகளுக்கும் இடம் கொடுக்காத வகையில் ஜியோபோன்கள் திட்டமிடப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தீபாவளிக்கு முன் ஜியோபோன் விநியோகம் செய்யப்பட்டும்.' என தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட ஜியோபோன் நேற்று முதல் டெலிவரி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த ஜியோ போன்களை கிராமப்புறங்களில் இருந்து டெலிவரி செய்ய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு மின்னணு நுகர்வோர் நிறுவனமான இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ், ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து தனது பயனர்களுக்கு 25 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், இன்டெக்ஸ் 4G மொபைல்களுடன் ஜியோ வாடிக்கையளர்கள் கூடுதலாக 5GB டேட்டா வினை ரூ.309 அல்லது அதற்கு அதிகமான டேட்டா பேக்கினில் பெறலாம்.
மேலும் இந்த சலுகையினை வாடிக்கையாளர்கள் 5 முறை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எனவே இதன் மூலம் வாடிகையாளர்கள் கூடுதலாக 25GB டேட்டா வரை பெற இயலும் என இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் இயக்குநர் மற்றும் வர்த்தக தலைவரான நிபீ மார்கண்ட்டே தெரிவித்துள்ளார்.
தொலை தொடர்பு நிறுவனத்தின் ஜாம்பவான் பிஎஸ்என்எல் ரூ.429 -க்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
ஜியோ-வினை தொடர்ந்து அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.429 -க்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த சலுகையின்படி 90 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி என்ற வீதம் 90 ஜிபி டேட்டா மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் முழுவதும் இலவசம் என்ற அதிரடி சலுகையை கேரளாவை தவிர இந்திய முழுவதும் பயன்படும் வகையில் (PAN India) திட்டத்தில் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் டெலிகாம் வாடிகையாளர்களை தன் கட்டுபாட்டில் வைத்துள்ள நிலையில் அதனை தகர்க்கும் முயற்சியில் ஏர்டெல் புதிய சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, புதியதாக 4ஜி சிம்-னை பல சலுகைகளுடன் சேர்த்து 84 நாள் வேலிடிட்டியுடன் வழங்கவுள்ளது.
இந்த 4ஜி சிம்-ன் விலை ரூ.399 மற்றும் இதன் சலுகைகளாக
வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் வீதம் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்.
84 ஜிபி 4ஜி மொபைல் டேட்டா.
ரிலையன்ஸ் ஜியோ தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் டெலிகாம் வாடிகையாளர்களை தன் கட்டுபாட்டில் வைத்துள்ள நிலையில் அதனை தகர்க்கும் முயற்சியில் பிஎஸ்என்எல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி ரூ.74-க்கு அதிரடி சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1 ஜிபி மொபைல் டேட்டா மற்றும் நாடு முழுவதும் இலவச வாய்ஸ் கால்களை வழங்குகிறது. ஆகஸ்ட் 3 முதல் 12 வரை மட்டுமே இந்த சலுகையை செல்லுபடி ஆகும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
அதிகம் எதிர்பார்ப்பை உருவாக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பீச்சர் ஃபோனை முகேஷ் அம்பானி நேற்று அறிமுகம் செய்தார். இந்தியாவில் ஜியோ பீச்சர் ஃபோனை இலவசமாக வழங்குவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்த ஜியோ பீச்சர் ஃபோனை எந்த கட்டணமும் இல்லாமலேயே முன்பதிவு செய்யலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஃபோன் என்ற புதிய பேசிக் மொபைலை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், வழக்கமான பேசிக் மொபைல்கள் போல இல்லாமல் குரல் மூலம் இயக்கும் வசதி, எமர்ஜென்சி கால் வசதி போன்றவையும் உள்ளன. இந்த ஜியோ ஃபோன் முழுக்க முழுக்க இந்தியர்களால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மொபைல் ஆகும்.
அதிகம் எதிர்பார்ப்பை உருவாக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பீச்சர் ஃபோனை முகேஷ் அம்பானி இன்று அறிமுகம் செய்தார். இந்தியாவில் ஜியோ பீச்சர் ஃபோனை இலவசமாக வழங்குவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
தற்போது வாடிக்கையாளர்கள் ரூபாய் 1500 வைப்பு இருப்பு தொகைனை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டம் வரும் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்தார்.
ஜியோ பீச்சர் ஃபோனின் சிறப்பம் அம்சங்கள் பின்வருமாறு:-
> 2.4 இன்ச் டிஸ்ப்ளே, 512 எம்.பி.ரேம், 128ஜிபி மைக்ரோ எஸ்.டி. டூயல் சிம்,
அதிகம் எதிர்பார்ப்பை உருவாக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பீச்சர் ஃபோனை முகேஷ் அம்பானி இன்று அறிமுகம் செய்கிறார்.
ஜியோ பீச்சர் ஃபோனின் சிறப்பம் அம்சங்கள் பின்வருமாறு:-
2.4 இன்ச் டிஸ்ப்ளே, 512 எம்.பி.ரேம், 128ஜிபி மைக்ரோ எஸ்.டி. டூயல் சிம்,
2 மெகாபிக்சல் ரியர் கேமரா, வி.ஜி.எ. முன்பக்க கேமரா, 2000
எம்.எ.எச்.பேட்டரி திறன், எஃப்.எம் ரேடியோ, ப்ளுடூத் 4.1, வீடியோ காலிங்
மேலும் இந்தியாவில் ஜியோ ஃபீச்சர் ஃபோனின் விலை ரூ.500 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.