அநேக இடங்களில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை மையம்

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

Written by - அதிரா ஆனந்த் | Edited by - Shiva Murugesan | Last Updated : Oct 29, 2021, 12:39 PM IST
  • 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
  • சென்னை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
  • இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
அநேக இடங்களில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை மையம் title=

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமா ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சிராப்பள்ளி,  திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை அப்டேட்:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று வங்க கடல் பகுதிகள் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி அல்லது பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

நாளை வானிலை எப்படி இருக்கும்?
தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டர்): 

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) - 12 சென்டிமீட்டர் மழை பதிவு 

காரைக்கால் (காரைக்கால்) - 10 சென்டிமீட்டர் மழை பதிவு

திருவாரூர் (திருவாரூர்) - 8 சென்டிமீட்டர் மழை பதிவு

வேதாரண்யம் (நாகப்பட்டினம் ) - 7 சென்டிமீட்டர் மழை பதிவு

தக்கலை (கன்னியாகுமரி) 6 சென்டிமீட்டர் மழை பதிவு

நன்னிலம் (திருவாரூர்) 5 சென்டிமீட்டர் மழை பதிவு

4 சென்டிமீட்டர் மழை பதிவான மாவட்டங்கள்:
திருப்பூண்டி (நாகப்பட்டினம் ), ஆய்க்குடி (தென்காசி ), கூடலூர் (தேனி ), ராதாபுரம் (திருநெல்வேலி ), இரணியல் (கன்னியாகுமரி ), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி ) தலா 4,

3 சென்டிமீட்டர் மழை பதிவான மாவட்டங்கள்: 
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி ), சாத்தான்குளம் (தூத்துக்குடி ), ராமேஸ்வரம் (இராமநாதபுரம் ), சேரன்மகாதேவி (திருநெல்வேலி ), நாகர்கோவில் (கன்னியாகுமரி ), சூரலக்கோடு (கன்னியாகுமரி ), பாண்டவையார் தலைமை (திருவாரூர் ), பேராவூரணி (தஞ்சாவூர் ), பேராவூரணி (தஞ்சாவூர் ), அணை (கன்னியாகுமரி ), கலியல் (கன்னியாகுமரி).

4 சென்டிமீட்டர் மழை பதிவான மாவட்டங்கள்:
தலைஞாயிறு (நாகப்பட்டினம் ), தரங்கம்பாடி (மயிலாடுதுறை ), தென்காசி (தென்காசி ), கொளச்சல் (கன்னியாகுமரி ), பாபநாசம் (திருநெல்வேலி ), மணிமுத்தாறு (திருநெல்வேலி ), மீமிசல் (புதுக்கோட்டை ), பாளையங்கோட்டை (திருநெல்வேலி ),  அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் ), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் ), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி ), சீர்காழி (மயிலாடுதுறை ), தஞ்சாவூர் (தஞ்சாவூர் ), சென்னை (என்) (சென்னை ), பாம்பன் (இராமநாதபுரம் ), பெருங்களூர் (புதுக்கோட்டை ), தேக்கடி (தேனி ), தொண்டி (ராமநாதபுரம் ), வட்டானம் (ராமநாதபுரம் ), சிதம்பரம் (கடலூர் ), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி ), மன்னார்குடி (திருவாரூர் ), செங்கோட்டை (தென்காசி ), காயல்பட்டினம் (தூத்துக்குடி ), நீடாமங்கலம் (திருவாரூர் ), புத்தன் அணை (கன்னியாகுமரி ) , சிவலோகம் (கன்னியாகுமரி).

 

Trending News