மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கிறது tnGovt!

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நாளை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது!

Last Updated : Nov 29, 2018, 03:19 PM IST
மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கிறது tnGovt! title=

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நாளை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய அரசு தனது அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில் மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தின் முடிவில் வரும் டிசம்பர் 4-ஆம் நாள் திருச்சியில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நாளை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News