ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம்

Admk General Body Meeting : ஜூலை 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

Written by - Chithira Rekha | Last Updated : Jul 6, 2022, 01:56 PM IST
  • அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம்
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் இடைக்காலத் தடை
  • உட்கட்சிப் பிரச்சினையில் தலையிட முடியாது
ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம் title=

கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்குழுவில் புதிதாக எந்த முடிவுகளையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கடந்த 23-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவு காலாவதி ஆகி விட்டதாக இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதே போல் உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தீர்வு காண முடியும் என  ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதிட்டது. 

ஆனால் உட்கட்சி விவகாரங்களில் தலையிட மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் ஒரு நபர் அமர்வுதான் இதில் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. மேலும், 11-ம் தேதி நடக்கும் பொதுக்குழு விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும்? எனக் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | EPS க்கு பொதுச்செயலாளர் பதவி - நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவின் முக்கிய அம்சங்கள்!

மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம், பொதுக்குழு சட்டப்படி நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தது. மேலும், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என கடந்த 23-ம் தேதி பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மேல் முறையீட்டு மனுவில் இரு தரப்பினரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

இந்த வழக்கு விசாரணையின்போது , எடப்பாடி பழனிசாமி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் அமர்வில் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த 'புதிய' சிக்கல்! - வேற ரூட் போடும் இ.பி.எஸ் தரப்பு!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News