தமிழகத்தில் இன்று 35,873 பேருக்கு கொரோனா பாதிப்பு: 448 பேர் உயிர் இழப்பு!!

சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் 35,873 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 448 பேர் தமிழகத்தில் இறந்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 22, 2021, 08:40 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 35,873 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
  • இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 448 பேர் தமிழகத்தில் இறந்தனர்.
  • இன்று 25,776 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர்.
தமிழகத்தில் இன்று 35,873 பேருக்கு கொரோனா பாதிப்பு: 448 பேர் உயிர் இழப்பு!!  title=

சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவில் பெரிதாக வீழ்ச்சியைக் காண முடியவில்லை.

இன்று தமிழகத்தில் 36,000-ஐ விட குறைந்தது கொரோனா தொற்றின் அளவு. சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் 35,873 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

இன்று கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 448 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,046 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இன்று 25,776 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 15,02,537 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 2,84,278 ஆக உள்ளது.

சென்னையில் (Chennai) மட்டும் இன்று ஒரே நாளில் 5,559 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 86 பேர் உயிர் இழந்தனர். 

இன்று 1,75,231 மாதிரிகள் சோதிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 35,873 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு: கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

12 வயதுக்கு உட்பட்ட 1404 சிறார்களுக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று மட்டும் சென்னையில் 5,559 பேர், செங்கல்பட்டில் 1954 பேரும், கோயம்பத்தூரில் 3165, கடலூரில் 801, தர்மபுரியில் 360, தஞ்சாவூரில் 884 பேரும், தேனியில் 701, திருப்பத்தூர் 494, திருவள்ளூர் 1511, திருவண்ணாமலையில் 757, திருவாரூரில் 569, தஞ்சாவூரில் 884, தேனியில் 701, தூத்துக்குடியில் 893, திருநெல்வேலியில் 589, திருச்சியில் 1351, வேலூரில் 588, விழுப்புரத்தில் 522, திருப்பூரில் 1466, அரியலூரில் 275பேரும், திண்டுக்கல்லில் 452, ஈரோடில் 1758, கன்னியாகுமரியில் 1017, காஞ்சிபுரத்தில் 1621, கரூரில் 315, புதுக்கோட்டையில் 426, நாமக்கல்லில் 410, திண்டுக்கல்லில் 385, ராமநாதபுரத்தில் 378 பேர் என தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது. 

இன்று அரசு (TN Government) மருத்துவமனைகளில் 279 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 169 பேரும் உயிர் இழந்தனர். கொரோனா தொற்று பாதிப்பால் இன்று இணை நோய்கள் இல்லாத 125 பேர் இறந்தனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 100 பேர் உயிரிழந்தனர்.

நேற்று முதன் முறையாக தமிழகத்தின் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 36,000-ஐத் தாண்டியது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு முந்தைய நாள், தமிழகத்தின் ஒரு நாள் தொற்று முதன் முறையாக 35,000-ஐத் தாண்டியது. அதற்கு முந்தைய நாள் 34,000-க்கு மேலாக இருந்த தொற்றின் அளவு அதற்கு நான்கு நாட்களுக்கு சுமார் 33,000 என்ற அளவில் இருந்தது. 

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் தொற்று எண்ணிக்கை, 36,000-ஐ விட குறைந்திருக்கிறது. 

ALSO READ: கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News