டிடிவி மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை

Last Updated : Oct 10, 2017, 01:07 PM IST
டிடிவி மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை title=

தன் மீதான துண்டு பிரசுரம் வழக்கை ரத்து செய்யக்கோரி டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், சேலம் மாவட்ட காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோம் செய்ததாக டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 36 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

கடந்த 29-ம் தேதி சேலத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் தலைமையிலான டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக கூறப்பட்டு இருந்தது.

இந்த பிரசுரங்களில் அதிமுக (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.கே.செல்வம், பெங்களூரு கே.வெற்றிவேல், சேலம் மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி ஆகியவர்களது உருவப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

டிடிவி தினகரன், அவரது ஆதரவாளர்கள் 16 பேர் மற்றும் பிரசுரங்களை வினியோகித்த 20 நபர்கள் என மொத்தம் 36 மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் அன்னதானப்பட்டி காவல்துறையில் சேலம் அஸ்தம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் சரவணன் புகார் கொடுத்ததன் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் இந்த வழக்கில் தினகரன், புகழேந்தி மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்ததுடன், போலீசார் பதிலளிக்கும் வரை, வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு அன்றைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Trending News