சசிகலாவுக்கு பரோல்: எங்களுக்கு ஆட்சேபனை இல்லை - தமிழக அரசு அறிவிப்பு

Last Updated : Oct 5, 2017, 04:14 PM IST
சசிகலாவுக்கு பரோல்: எங்களுக்கு ஆட்சேபனை இல்லை - தமிழக அரசு அறிவிப்பு title=

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை காண செல்ல வேண்டும் என 15 நாட்கள் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவில் குளறுபடி இருந்ததால் சிறை நிர்வாகம் அதனை தள்ளுபடி செய்தது. 

மீண்டும் நேற்று பரோல் கேட்டு சசிகலா தரப்பில் சரியான ஆதாரத்தோடு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், சசிகலா பரோலை அடுத்து, சிறை நிர்வாகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதில், சசிகலா பரோலில் விடிவிக்கப்பட்டால், அவரின் பாதுகாப்பு மற்றும் அவர் தங்குமிடம் குறித்தும், சட்ட ஒழுங்கு குறித்தும் கேட்டு கடிதம் அனுப்பியது.

இதனையடுத்து, சசிகலாவுக்கு பரோல் வழங்குவதில் எந்த ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சசிகலா பரோலில் வருவது உறுதி என தெரிகிறது. அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

Trending News