பால் கடையில் பிரிட்ஜ் வெடித்து விபத்து; ‌ பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

பால் கடையில் குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து ஏற்பட்டதை அடுத்து ‌பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 23, 2022, 06:48 PM IST
பால் கடையில் பிரிட்ஜ் வெடித்து விபத்து; ‌ பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்! title=

பால் கடையில் குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து ஏற்பட்டதை அடுத்து ‌பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அதே பகுதியில் எஸ்.கே.ஏ என்ற பால் ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில். அந்த பால் ஸ்டோரில் உயர் மின் அழுத்தம் காரணமாக 350 லிட்டர்‌ கொள்ளவு கொண்ட குளிர்சாதன பெட்டி‌ வெடித்து விபத்துக்குள்ளது . இதனால் பயங்கர சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

பிரிட்ஜ் வெடித்த கடையின் உரிமையாளர் ரவிச்சந்திரன் மற்றும் அருகிலிருந்த  ராஜேந்திரன், மணிகண்டன் இது குறித்து கூறுகையில்,  கடையின் கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமாகின என்றனர். தகவலறிந்து, ரிஷிவந்தியம் தீயணைப்புத் துறையினர் வீரர்கள் மீதமுள்ள தீயை அணைத்தனர். மேலும் இது குறித்து ரிஷிவந்தியம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | திருப்பூர் அருகே தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News