முன்னாள் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்... காதலனின் கொடூர வெறிச்செயல்!

மதுரையில் முன்னாள் காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 9, 2022, 12:07 PM IST
  • வீட்டில் தனியாக இருந்த மணப்பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்
  • பெற்றோரின் மறுப்பால் ஆத்திரமடைந்த காதலன் வெறிச்செயல்
முன்னாள் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்... காதலனின் கொடூர வெறிச்செயல்! title=

மதுரை, பொன்மேனி பகுதியில் உள்ள குடியானவர் தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் அபர்ணா (வயது 19) கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்துள்ளார்.

மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (23)  கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் அபர்ணாவை வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அபர்ணாவும் ஹரிஹரனை காதலித்ததாக தெரிகிறது. 

பின்னர் குடும்ப சூழலால் தன் காதலை அபர்ணா கைவிட்டுள்ளார். இதனால் ஹரிஹரன் தொடர்ந்து அபர்ணைவை தன்னை திருமனம் செய்துகொள்ளுமாறு தொல்லை செய்து வந்துள்ளார். 

இதற்கிடையில் அபர்ணாவின் வீட்டிற்குச்சென்று ஹரிஹரன் அபர்ணாவை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அபர்ணாவின் பெற்றோர் பெண் தர மறுத்துள்ளனர்.

இதனையடுத்து ஹரிஹரன் தன் காதலியான அபர்ணாவை தொடர்ந்து வற்புறுத்தி வரவே, அபர்ணா தன் வீட்டோரிடம் கூறியுள்ளார். பின்னர் அபர்ணாவை மேற்கொண்டு படிக்கவேண்டாம் என்று கூறிய பெற்றோர் அபர்ணாவுக்கு திருமண ஏற்பாடு செய்ய முனைந்தனர்.

பின்னர் முனீஸ்வரன் என்பவருடன் அபர்ணாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்திற்காக அபர்ணைவின் பெற்றோர் நேற்று மாலை கடைகளுக்குச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க | இரவின் நிழல் படம் வெளியாகுமா? வந்தது புதிய சிக்கல்!

அப்போது அபர்ணா வீட்டில் தனியாக இருந்ததை அறிந்துகொண்ட ஹரிஹரன் அபர்ணாவின் வீட்டிற்கு சென்று அபர்ணாவை தாக்கியுள்ளார். உதவிக்கு ஆட்கள் இல்லாமல் இருந்த அபர்ணாவை ஹரிஹரன் கத்தி கொண்டு கழுத்தில் தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் ஹரிஹரன் வீட்டைவிட்டு தப்பிக்க முயன்றபோது அபர்ணாவின் உறவினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். ஹரிஹரன் தப்பிச்செல்வதையும் பார்த்துள்ளனர். இதையடுத்து உள்ளே சென்று பார்க்கையில், அபர்ணா கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இதைக்கண்ட உறவினர்கள் அளறிஅடித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அபர்ணாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் தப்பியோடிய காதலன் ஹரிஹரன் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பதுங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்து அவரை இன்று கைது செய்தனர்.

மதுரையில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | ரோலக்ஸ் சூர்யா பற்றி முதன் முதலாக மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News