மக்களவை தேர்தல் ADMK தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு வெளியீடு!

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில் கூடுதல் இணைப்பு வெளியீடு!

Last Updated : Mar 24, 2019, 04:32 PM IST
மக்களவை தேர்தல் ADMK தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு வெளியீடு! title=

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில் கூடுதல் இணைப்பு வெளியீடு!

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி என அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

இந்நிலையில், மக்களவை தேர்தல் அறிக்கையில் கூடுதலாக அதிமுகவின் சாதனைகள்  மற்றும் வாக்குறுதிகள் அடங்கிய  இணைப்பை  அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 19 ஆம் தேதி வெளியிட்டார். 

அதில், *காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.
*பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*காவிரி டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். 
* தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்.
*ஜாதி சான்றிதலில் மாற்றம் இன்றி மலைவாழ், பிற்படுத்தப்பட்டோர் மதம் மாற வழிவகுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். 
*இலங்கை இன படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றத்தில் முறையான விசாரணை நடத்தப்படவும், இலங்கை ராணுவம் தமிழர்களை அழிப்பதற்கு, திமுக காங்கிரஸ் கூட்டணி செய்த இரகசிய உதவிகளை வெளிக்கொணரவும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். 
*புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
*பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம்.
*தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு.
*நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
*கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
*மோகனூர் தடுப்பணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
*மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*விவசாய கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம்.
*பெண்கள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்க தேசிய அளவில் புதிய அமைப்பை உருவாக்க அதிமுக வலியுறுத்தும்.
*காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து வறட்சியின் போது பயன்படுத்த திட்டம் கொண்டுவரப்படும்.
*உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பை பெறும் வண்னம் காலத்திற்கேற்ற பயிற்சி எம்.ஜி.ஆர் தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு திட்டம்.
*வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1500 செலுத்தப்படும்.
*அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் .

இந்நிலையில், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுதரப்படும், 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசையும், குடியரசுத்தலைவரையும் வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் மற்றும் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய கூடுதல் இணைப்பை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. 

 

Trending News