OPS வாய் திறந்தாலே ஜெ., மரணம் முடிச்சுகள் அவிழும்!!

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் உண்மையை மட்டுமே சொல்லப்போவதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

Last Updated : Feb 6, 2019, 11:50 AM IST
OPS வாய் திறந்தாலே ஜெ., மரணம் முடிச்சுகள் அவிழும்!! title=

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் உண்மையை மட்டுமே சொல்லப்போவதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இறுதிக்கட்ட விசாரணையை நெருங்கியுள்ள ஆணையம், தனது அறிக்கையை வரும் 24-ம் தேதிக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில் நேற்று ஆறுமுகசாமி ஆணையம் முன்பு அவர் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றும் அவர் ஆஜராகவில்லை. அந்த வகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர்,

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கம் அளித்தால்தான் ஜெயலலிதா மரணத்தில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான முடிச்சுகள் அவிழ்க்கப்படும். மீண்டும் 11-ம் தேதி ஆணையத்தில் விசாரணை தொடங்கும். 12-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராவார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News