ஐபிஎல் 2017:பெங்களூர்-ஐதராபாத் போட்டி மழை காரணமாக தாமதம்

Last Updated : Apr 25, 2017, 08:17 PM IST
ஐபிஎல் 2017:பெங்களூர்-ஐதராபாத் போட்டி மழை காரணமாக தாமதம் title=

ஐபிஎல். போட்டியின் 29-வது லீக் ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் 8 மணிக்கு நடக்க இருந்தது.

ஆனால் பெங்களூரில் மழை பெய்வதால் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. மழை காரணமாக ஆட்டம் இன்னும் தொடங்கவில்லை. 

 

 

 

 

இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

பெங்களூர் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. குஜராத், டெல்லி அணிகளை வென்று இருந்தது. ஐதராபாத், புனே, மும்பை, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம் தோற்று இருந்தது.

ஐதராபாத் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பெங்களூர், குஜராத், பஞ்சாப், டெல்லி அணிகளை வீழ்த்தி இருந்தது. மும்பை, கொல்கத்தா, புனே அணிகளிடம் தோற்று இருந்தது.

இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் 6 போட்டியிலும், பெங்களூர் 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

Trending News