செப்டம்பர் 24 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு பொழியும்

செப்டம்பர் 24 அன்று, சுக்கிரன் கிரகம் கன்னி ராசியில் மாறப்போகிறது. சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை பணம், மகிழ்ச்சி-வளம் மற்றும் காதல் நிறைந்ததாக மாற்றும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 19, 2022, 08:22 AM IST
  • கன்னி ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி 2022
  • பணம்-காதல்-ஆடம்பரம் வாழ்க்கை எந்த ராசிக்கு
  • சுக்கிரன் ராசி பரிவர்த்தன் 2022
செப்டம்பர் 24 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு பொழியும் title=

சுக்கிரன் பெயர்ச்சி  2022: ஜோதிடத்தின் படி, சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதன்படி சுக்கிரன் கிரகம் வருகிற செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி தனது ராசியை மாறப் போகிறது. அதன்படி சுக்கிரன் கிரகம் கன்னி ராசியில் பிரவேசிப்பார். இந்த நேரத்தில் சூரியனும் புதனும் ஏற்கனவே கன்னி ராசியில் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் கன்னி ராசியில் சுக்கிரன் மாறுவது சிறப்பான கிரக நிலையை உருவாக்கும். இது 12 ராசிகளுக்கும் நல்ல பலனை ஏற்படுத்தி தரும். மறுபுறம், சுக்கிரன் சஞ்சாரம் மூன்று ராசிக்காரர்களுக்கு நிறைய பணம், அன்பு மற்றும் செழிப்பைக் கொடுக்கும். எனவே  எந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். 

சுக்கிரன் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அன்பையும் பணத்தையும் தருவார் 

மேலும் படிக்க | குரு-சந்திரன் இணைவினால் கஜகேசரி ராஜயோகம்; ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

ரிஷபம்: பணமும் மரியாதையும் கிடைக்கும்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிபதி சுக்கிரன் இருப்பதால் சுக்கிரன் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். இவர்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பண வரவு மிகவும் சாதகமாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிறுத்தப்பட்டு இருந்து பணத்தைப் திருப்பி பெறுவீர்கள். மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும். 

மிதுனம்: பண ஆதாயம் உண்டாகும் 

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சுப பலன்களைத் தரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அவர்களின் வியாபாரம் பெருகும். பண வரவு சாதகமாக இருக்கும். சொத்துக்களைக் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் உணர்வீர்கள். 

கன்னி: முதலீடு செய்ய நல்ல நேரம் 

சுக்கிரன் கிரகம் கன்னி ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய பாசிட்டிவ் பாதிப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரம் அவர்களுக்கு சுப பலன்களைத் தரும். பண வரவு மிகவும் சாதகமாக இருக்கும். பழைய முதலீடுகள் லாபகரமாக இருக்கும். முதலீடு செய்வதற்கும் இதுவே நல்ல நேரம். கன்னி ராசிக்காரர்களின் வியாபாரம் பெருகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செப்டம்பர் 18ம் தேதிக்குள் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News