விருச்சிக ராசியில் புத-ஆதித்ய யோகம்; உச்சத்தை தொடப்போகும் ‘6’ ராசிகள்!

விருச்சிக ராசியில் புதன் மற்றும் சூரியன் சஞ்சரிப்பதால் உருவான புத-ஆதித்ய யோகம் டிசம்பர் 3 வரை நீடிக்கும் நிலையில், இந்த யோகம் 6 ராசிக்காரர்களுக்கும் பெரும் வெற்றியையும் செல்வத்தையும் தரும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 21, 2022, 07:49 PM IST
  • வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை வலுவடையும்.
  • தடைபட்ட வேலைகள் நிறைவேற ஆரம்பிக்கும்.
  • உறவுகள் வலுவாக இருக்கும்.
விருச்சிக ராசியில் புத-ஆதித்ய யோகம்; உச்சத்தை தொடப்போகும் ‘6’ ராசிகள்! title=

விருச்சிக ராசியில் புதாதித்ய யோகம்: ஜோதிடத்தில் புத்தாதித்ய ராஜயோகம் மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகம் புதன் மற்றும் சூரியன் சேர்க்கையால் உருவாகிறது. இந்த நேரத்தில் கிரகங்களின் ராஜாவான சூரியனும், கிரகங்களின் அதிபதியான புதனும் விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளனர். விருச்சிக ராசியில் புதனும் சூரியனும் இணைந்திருப்பதால் புத ஆதித்ய யோகம் உருவாகி வருகிறது. டிசம்பர் 3, 2022 வரை விருச்சிக ராசியில் இருக்கும் புதன் கிரகம், 6 ராசிக்காரர்களுக்கு  ராஜயோகம் பலன்களைத் தரும். டிசம்பர் 3 வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு  மிகவும்அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்வோம்.

புத ஆதித்ய யோக பலன்கள்:

கடகம்: விருச்சிக ராசியில் சூரியன்-புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய யோகம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். தொழிலில் லாபம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

கன்னி: புதன் - சூரியனின் சஞ்சாரத்தால் உருவாகும் புத ஆதித்ய யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். தன்னம்பிக்கையும் வலிமையும் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு மகிழ்ச்சியை கொண்டு வரும்.

துலாம்: சூரியன் மற்றும் புதன் ராசி மாற்றத்தால் உருவாகும் புதாதித்ய யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். முதலீடு மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. செலவுகள் குறையும், சேமிக்கவும் முடியும்.

மேலும் படிக்க | விருச்சிகத்தில் உதயமாகும் சுக்கிரன் ‘3’ ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார்!

விருச்சிகம்: சூரியனும் புதனும் விருச்சிக ராசியில் இணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்கிய நிலையில், விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதன் பலன்கள் சிறப்பாக இருக்கும். மரியாதை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தடை பட்ட வேலைகள் நிறைவேற ஆரம்பிக்கும்.

மகரம்: புத ஆதித்ய யோகம் காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை வலுவடையும். உறவுகள் வலுவாக இருக்கும். கடனில் சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். உயர் பதவி கிடைக்கும்.

கும்பம்: சூரியன்-புதன் இணைவதால் உருவாகும் புதாதித்ய யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு நிறைய பலன்களைத் தரும். பொருளாதார ரீதியாக பெரும் நன்மை ஏற்படும். வங்கி இருப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் இரண்டிலும் லாபம் உண்டாகும். நீங்கள் செலவுகளைக் குறைக்க முடிந்தால், நீங்கள் வங்கி இருப்பை கணிசமாக அதிகரிப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Weekly Horoscope (November 21-27): மேஷம் முதல் கன்னி வரையிலான வார பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News