என்ன கொடும சார் இது.. ஆசிரியர்கள் செய்ய வேண்டிய செயலா இது: ஷாக்கிங் வீடியோ வைரல்

பாட்னாவில் பள்ளியின் தலைமை ஆசிரியையை சக பெண் ஆசிரியர்கள் இருவர் செருப்பாலும் குச்சியாலும் அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 26, 2023, 03:49 PM IST
  • தலைமை ஆசிரியையை செருப்பால் அடித்த சக ஆசிரியர்கள்.
  • இன்றிய ஷாக்கிங் வைரல் வீடியோ.
  • பீகார் மாநிலம் பாட்னாவில் ஏற்பட்ட சம்பவம் வைரல்.
என்ன கொடும சார் இது.. ஆசிரியர்கள் செய்ய வேண்டிய செயலா இது: ஷாக்கிங் வீடியோ வைரல் title=

ஆசிரியரின் வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், பள்ளி வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதிலும் பள்ளியில் எடுக்கப்படும் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. இதற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது, ஏனெனில் இது போன்ற வீடியோவை மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பதுண்டு. 

சமூக ஊடகங்களில் தற்போதும் ஒரு வித்தியாசமான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது காண்பவர்களுக்கு வியப்பை அளிக்கின்றது. மேலும் இந்த வீடியோ பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்பட்டு வரும் பள்ளியை சேர்ந்தது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பள்ளியில் ஆசிரியைகளுக்குள் நடந்த அடிதடி வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க | ஹய்யயோ.. டாய்லெட்டுக்குள்ள இப்படியா.. விஷப் பாம்பின் வைரல் வீடியோ

இந்த பள்ளியின் பெயர் கொரியா வித்யாலயா பள்ளி ஆகும். மேலும் இந்த பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் அனிதா குமாரி. அங்கு பணியாற்றி வரும் தலைமை ஆசிரியரின் பெயர் காந்திகுமாரி ஆகும். இந்த நிலையில் தலைமை ஆசிரியை காந்திகுமாரி, அனிதா குமாரியை வகுப்பறையின் ஜன்னலை மூடுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அனிதா குமாரி அந்த ஜன்னல்களை மூட மறுத்துவிடுகிறார்.

இதுதொடர்பாக தலைமை ஆசிரியை காந்தி குமாரி மற்றும் சக ஆசிரியைகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருமே தகாத வார்த்தைகளை பயன்படுத்தினர், அதுவும் பள்ளி மாணவர்களின் முன்னிலையிலேயே. வாக்குவாதம் முற்றியதால் தலைமை ஆசிரியை காந்தி குமாரி வகுப்பறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அனிதா குமாரி தலைமை ஆசிரயை காந்தி குமாரியை சரமாரியாக செருப்பாலும், குச்சியாலும் அடித்துள்ளார். அப்போது மற்றொரு ஆசிரியையும் சேர்ந்து தலைமை ஆசிரியை கீழே தள்ளி அவரது முடியை பிடித்து இழுத்து தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளார்.

ஆசிரியர்களின் தகராறு வீடியோவை இங்கே காணுங்கள்:

இந்த இரண்டு ஆசிரியைகளும் தலைமை ஆசிரியையை அடித்து துவைத்தனர்.இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தலையீட்டு ஆசிரியைகளின் அடிதடியை நிறுத்தினர். ஆசிரியையைகளின் இந்த மோதலை அப்பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து அம்மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு ஆசிரியர்களுக்கும் இடையே தனிப்பட்ட தகராறு இருந்ததும் அது தற்போது பள்ளிக்கூடம் வரை வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | அட ஒண்ணுமில்லபா.. வெயில் கொஞ்சம் அதிகமா இருக்கு: தாத்தாவின் மூளையை பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News