இந்த இயக்குனர் மட்டும் வேண்டாம்.. அழுகாத நிலையில் கெஞ்சும் விஜய் ரசிகர்கள்!

தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2023, 03:15 PM IST
  • நடிகர் விஜய் தற்போது 'லியோ' படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார்.
  • வம்சியை தொடர்ந்து விஜய் மீண்டும் தெலுங்கு இயக்குனர் ஒருவரோடு இணைகிறார்.
  • 'தளபதி 68' படத்தின் மூலம் நான்காவது முறையாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.
இந்த இயக்குனர் மட்டும் வேண்டாம்.. அழுகாத நிலையில் கெஞ்சும் விஜய் ரசிகர்கள்! title=

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக  இருந்து வருகிறார்.  நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.  செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.  'லியோ' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நான்காவது முறையாக அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க: தனது அறுவை சிகிச்சை பற்றி மனம் திறந்த பிக்பாஸ் பிரபலம் ஷிவின்!

அட்லீ - விஜய் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கப்போகும் 'தளபதி 68' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் பெருகியுள்ளது.  இந்த படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதற்கு முன்னர் நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்திருந்தார்.  பொங்கல் வெளியீடாக வெளிவந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  இந்நிலையில் மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரோடு நடிகர் விஜய் கைகோர்க்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Gopichand Malineni

நந்தமுரி பாலக்ரிஷ்ணாவை வைத்து 'வீர நரசிம்ம ரெட்டி' படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி தான் விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது.  தெலுங்கு மொழியில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மற்றும் இப்படத்தின் தமிழ் வெர்ஷன் ஓடிடி தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.  இயக்குனர் கோபிசந்த் மலினேனி நடிகர் விஜய்யிடம் கதையை கூறியதாகவும், இந்த கதை பிடித்துப்போனதால் விஜய் இப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.  தற்போது விஜய் படங்களில் பிசியாக இருந்து வருவதால் கோபிசந்த்-விஜய் கூட்டணியில் உருவாகும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் மீண்டும் மற்றொரு தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்க வேண்டாம் என்று இணையத்தில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: ஏகே 62 படத்திற்கு முன்பே சூடு பிடிக்கும் அஜித்தின் ஏகே 63 படத்தின் பணிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News