நடிகை திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டதாக வதந்தி! பொய் தகவல் பரவ காரணம் என்ன..?

Divya Spandana Fake Death News Reason: பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 6, 2023, 04:27 PM IST
  • தமிழ் திரைப்படங்கலில் நடித்து வந்தவர், ரம்யா ஸ்பந்தனா.
  • இவர் பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
  • இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
நடிகை திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டதாக வதந்தி! பொய் தகவல் பரவ காரணம் என்ன..?  title=

கிரி, வாரணம் ஆயிரம், பாெல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் திவ்யா ஸ்பந்தனா. இவர் உயிரிழந்து விட்டதாக சமூக ஊடகங்களில் இன்று தகவல்கள் பரவியது. இதையடுத்து, அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திவ்யா ஸ்பந்தனா:

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர், திவ்யா ஸ்பந்தனா. இவர் படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை ரம்யா என மாற்றிக்கொண்டர். தமிழ் ஹீரோக்களான சூர்யா, அர்ஜுன், தனுஷ், சிம்பு உள்ளிட்டோருடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 2008ஆம் ஆண்டு வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். 

கன்னட மொழி திரைப்படங்கள் இவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. இதுவரை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2013ஆம் ஆண்டு கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 

உயிரிழந்ததாக வதந்தி:

திவ்யா ஸ்பந்தனா, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து தமிழின் பல முன்னணி செய்தி தளங்களும் சமூக வலைதளங்களும் அவர் உயிரிழந்து விட்டதாக செய்தியினை பரப்பின. இதையடுத்து, இதை உண்மை என்று நம்பிய மக்கள் பலர் திவ்யா ஸ்பந்தனா உயிரிழப்பிற்கு அஞ்சலி தெரிவிப்பதாக சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர். 

மேலும் படிக்க | அதிரடி திருப்பங்களுடன் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர்! இன்றைய அப்டேட் என்ன?

“நலமாக உள்ளார்..”

திவ்யா ஸ்பந்தனா தற்போது நலமாக உள்ளதாக அவரது தோழியும் பிரபல நிருபருமான சித்ரா சுப்ரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இப்போதுதான் திவ்யா ஸ்பந்தனாவிடம் பேசினேன். அவர் நலமுடன் உள்ளார். அவர் ‘ப்ராக்’ நகருக்கு நாளை செல்ல உள்ளார். அதன் பிறகு அவர் பெங்களூருவிற்கு வருவார்..” என்று கூறியிருந்தார். 

“நம்ம ஊருக்கு வருகிறேன்..”

தனது தோழியின் இந்த பதிவிற்கு திவ்யா பதில் ட்வீட்டினை செய்திருந்தார். அதில், “விரைவில் நம்ம ஊருக்கு வந்து உங்களை சந்திக்கிறேன்..” என்று கூறியிருந்தார். இதையடுத்து, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

ஒரு பெயரினால் இவ்வளவு பிரச்சனையா..!

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகர், விஜய் ராகவேந்திரா. இவரது மனைவி 44 வயதில் மாரடைப்பு காரணமாக சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த செய்தி கன்னட ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாரடைப்பால் உயிரிழந்த நடிகரின் மனைவியின் பெயர் ஸ்பந்தனா. இன்று உயிரிழ்ந்து விட்டதாக தகவல் பரவிய நடிகையின் பெயரும் ஸ்பந்தனா. இந்த பெயரினாலேயே இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நேற்று ‘இந்தியா’ என்ற பெயரை  ‘பாரத்’ என்று மாற்ற இருப்பது குறித்த பிரச்சனை வெடித்தது. இது குறித்து திவ்யா ஸ்பந்தனா வெளியிட்டிருந்த ட்வீட்டில், “ஒரு பெயரினால் என்ன மாறப்போகிறது என்று கேட்கிறார்கள்..நிறையவே மாறும்..” என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பெயர் குழப்பத்தால் ஸ்பந்தனாவிற்கு இந்த பிரச்சனை எழுந்துள்ளது.

மேலும் படிக்க | ஜவான் to தி நன்..இந்த வாரம் திரையரங்குகளில் வெளிவர இருக்கும் படங்களின் லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News