தனுஷ் உள்பட பல திரை பிரபலங்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..!

நடிகர் தனுஷ் உள்பட பல திரை பிரபலங்கள் மீது தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் பல தயாரிப்பாளர்களால் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 2, 2023, 04:31 PM IST
  • தனுஷ் உள்பட பல திரை பிரபலங்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்.
  • நடிகைகளால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்.
  • புகாரின் விவரம்.
தனுஷ் உள்பட பல திரை பிரபலங்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..! title=

சென்னையில் உள்ள அண்னாசாலையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் கூட்டம் நடைப்பெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்:

தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று நடைப்பெற்றா பொதுக்கூட்டத்தில் குழு உறுப்பினர்களுக்கு சம்மந்தமான பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன. அப்போது நடிகர் தனுஷ், நடிகைகள் ராய் லட்சுமி, அமலா பால், உள்ளிட்ட முக்கிய நடிகைகளின் மீது புகார் தெரிவிக்கப்படது. இவர்களால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி தயாரிப்பாளர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | ‘என் கணவருக்கு யார் பதில் சொல்வது?’ முத்தக்காட்சியில் நடக்காதது குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..!

தனுஷ் மீது முறையீடு..

பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் சார்பாக நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அதற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக இதற்கான படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. ஒரு சில காரணங்களா அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையீடு செய்யப்பட்டது. இறுதியில், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் சார்பாக நடிகர் தனுஷ் மீண்டும் அந்த படத்தில் நடித்து தர வேண்டும் என நடிகர் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக, தனுஷ் 20 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நடிகைகள் மீது புகார்..

தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளாக விளங்கும் ராய் லட்சுமி, அமலா பால் உள்ளிட்ட முக்கிய நடிகைகள் மீதும் தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட நடிகைகள் படப்பிடிப்புக்கு வருவதற்காக 10க்கும் மேற்பட்ட காவலர்களை நியமிப்பதாகவும் அவர்களுக்கு தயாரிப்பு நிறுவனமே அதிக தொகை சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனால், இனிவரும் காலங்களில் நடிகைகளின் பாதுகாவலர்களுக்கு அவர்களே சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் எக்காரணத்தை கொண்டும் கொடுக்க வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பட நிகழ்ச்சிக்ளில் நடிகைகள் பெரும்பாலும் பங்கேற்பதில்லை என்றும் இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. நடிகைகள் இதற்கும் சேர்த்து சம்பளம் வாங்குவதால் இசை வெளியீட்டு விழாக்கள், பிரமோஷன் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் அவர்கள் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த புகார்கள் பரிசீலிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது, இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் இவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படுவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

5 நடிகர்கள் மீது புகார்..

தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிவிட்டால், அவர்களது படத்தில் நடிக்க நடிகர்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால் அதற்கு மாறாக சில நடிகர்கள் நடந்து கொள்வதாக தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் புகார் எழுந்தது. இதையடுத்து அப்படி கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கும் நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதில், எஸ்.ஜே சூர்யா, அதர்வா, விஷால், யோகி பாபு, சிம்பு ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. 

ரெட் கார்டு கொடுத்தால் என்ன நடக்கும்..?

சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் வடிவேலு மீது பிரபல தயாரிப்பு நிறுவனமும் இயக்குநர் சங்கங்கமும் அளித்த புகாரின் பேரில் அவருக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்டது. இதனால், சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு, அந்த ரெட் கார்டு நீக்கப்பட்டு தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இதே போன்ற நிலை தற்போது பிரபல நடிகர்களாக உள்ளவர்களுக்கும் வருமா என்று ரசிகர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர். இவர்களது விளக்கம் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றால் இவர்களுக்கு கண்டிப்பாக ரெட் கார்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | இறப்பதற்கு முன்பு கடைசி ஆசையை தெரிவித்த பிரபல நடிகை..! அப்படியென்ன ஆசை..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News