இலவச உணவு அளிக்கும் இந்தியாவின் சில சுற்றுலா தளங்கள்...

சுற்றுலா (அ) பயணத்தின் போது உணவிற்கு நாம் செலவழிக்கும் பணம் அதிகம்... சில யாத்திரைக்காக நாம் சேர்த்து வைத்திருக்கும் பணத்தில் உணவிற்காக மட்டும் நாம் நமது பணத்தினை அதிகம் செலவு செய்தால் பிறகு எப்படி சுற்றுலாவை அனுபவிக்க முடியும்?

Last Updated : Dec 30, 2019, 08:13 PM IST
இலவச உணவு அளிக்கும் இந்தியாவின் சில சுற்றுலா தளங்கள்... title=

சுற்றுலா (அ) பயணத்தின் போது உணவிற்கு நாம் செலவழிக்கும் பணம் அதிகம்... சில யாத்திரைக்காக நாம் சேர்த்து வைத்திருக்கும் பணத்தில் உணவிற்காக மட்டும் நாம் நமது பணத்தினை அதிகம் செலவு செய்தால் பிறகு எப்படி சுற்றுலாவை அனுபவிக்க முடியும்?

ஒருவேளை நமது பயணத்தில் நமக்கு உணவு இலவசமாக கிடைத்தால், அல்லது மளிவாக கிடைத்தால் பெருமளவு பணம் நமது சேமிப்பில் இருந்து மிச்சப்படுத்தலாம். அத்தகைய இடங்களில் இலவச உணவை சாப்பிடுவதன் மூலம், நீங்கள் மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும்.. அவ்வாறு இலவசமாக உணவை வழங்குவது ஏழை மக்களுக்கும், சிரமத்தில் சிக்கியுள்ள பயணிகளுக்கும் பெருமளவிலு உதவும்.

அந்த வகையில் பயணிகளுக்கு (அ) யாத்திரகளுக்கு இலவசமாக உணவு கிடைக்கும் சில இடங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

திருப்பதி: திருப்பதி கோயில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பிரபலமானது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இங்கே ஏராளமான பக்தர்கள் தங்கள் சார்பாக உணவு ஏற்பாடு செய்ய உதவுகிறார்கள், பதிலுக்கு அவர்கள் வேறு எதையும் விரும்பவில்லை. காரணம்,  ஏதாவது பெற ஆசை இல்லாமல் செய்யப்படும் நன்கொடைகள் சிறந்தவை என்று அங்கு நம்ப படுகிறது.

அமிர்தசரஸின் தங்க கோயில்: உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அமிர்தசரஸ் கோல்டன் கோயிலுக்கு வருகை தருகின்றனர். சீக்கியர்களின் இந்த புகழ்பெற்ற மத இடத்தில் வழக்கமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இலவச உணவை சாப்பிடுகிறார்கள். இங்கு வருகை தரும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் சுவையான உணவை அனுபவிக்கிறார்கள். எனவே இங்கு செல்லும் யாத்ரீகர்கள், உணவிற்காக அஞ்ச வேண்டாம்.

'எக்ஸ்சேஞ்ச் ஓவர் காபி' (Exchange Over Coffee): டெல்லியின் வடக்கு வளாகத்தில் இலவச மதிய உணவு குறித்த தனி கருத்து கிடைக்கிறது. புத்தகங்களுக்கு பதிலாக உணவு பரிமாற்றத்தை இங்கே செய்யலாம். இந்த இடம் XCO என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடம் மிகப் பெரியதாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது, ஆனால் அது எப்போதும் இங்கே பிரகாசமான ஒன்றாக காட்சியளிக்கிறது. இங்குள்ள மெனுவிலிருந்து உங்கள் விருப்பப்படி டிஷ் தேர்ந்தெடுக்க, புத்தகங்களை நீங்கள் நன்கொடையாக வழங்கலாம்.

பப்பாடவாடாவின் 'Tree of Goodness' ஏழைகளின் பசியை ஒழிக்கிறது: கொச்சியில் போதுமான உணவைப் பெற முடியாதவர்களுக்கு 'Tree of Goodness' ஒரு சிறந்த ஆதரவாகும். உண்மையில் குறித்த உணவகத்திற்கு வெளியே ஒரு குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் உணவகத்தில் மீதம் ஆன உணவுகள் சேகரித்து வைக்கப்படுகிறது. உணவு இன்றி வரும் நபர்கள் இந்த உணவினை எடுத்து உண்ணலாம். நீலு பாலின் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த சேவை தற்போதும் நீடிக்கிறது. மேலும் அவர் கொச்சியில் வசிப்பவர்களையும் இந்த இயக்கத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News