இராவணன் இறக்கும்போது உலகிற்கு கூறிய ஆழமான வார்த்தைகள்!

நாடுமுழுவதும் மிகுந்த ஆடம்பரமாக கொண்டாடும் தசரா பண்டிகை இன்று அனுசரிக்கப்படுகிறது.

Last Updated : Oct 8, 2019, 02:29 PM IST
இராவணன் இறக்கும்போது உலகிற்கு கூறிய ஆழமான வார்த்தைகள்! title=

நாடுமுழுவதும் மிகுந்த ஆடம்பரமாக கொண்டாடும் தசரா பண்டிகை இன்று அனுசரிக்கப்படுகிறது.

தசரா பொதுவாக ராவண எரிப்பு என்று அழைக்கப்படுகிறது. ராவணன் ராமாயணத்தின் முக்கிய வில்லனாகவும், லங்காவின் அரசனாகவும் கருதப்படுகிறார். ராவணன் இல்லாமல் ராமாயணம் சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் ராவணன் தனது இறப்பின் போது உலகிற்கு ஒரு பாடத்தை விட்டு சென்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

ராவணன் ராமனால் கொல்லப்பட்டபோது, ​​லட்சுமனிடம் சில விஷயங்களைச் சொன்னதாகவும், இந்த இறுதி வார்த்தைகள் வாழ்க்கைக்கு தேவையான பல கருத்துகளை தாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராவணனின் தவறுகளை உணர்ந்து அவர் குறிப்பிட்டுள்ள கடைசி வார்த்தைகளை இன்று நாம் உங்களுக்கு சொல்லப்போகிறோம். அந்த வாக்கியங்கள்...

1. ராவணன் இறந்த நேரத்தில் ராவணன் "நீங்கள் அதிர்ஷ்டத்தை தோற்கடிக்க முடியும் என்ற பாசாங்கை ஒருபோதும் பிடித்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்டத்தில் எழுதப்பட்டவை அனுபவிக்கப்பட வேண்டியிருக்கும். அன்பு அல்லது வெறுப்பு, ஆனால் நீங்கள் எதைச் செய்தாலும் முழு பலத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்யுங்கள்.

2. இறக்கும் போது ராவணன், "வெற்றி பெற விரும்பும் ராஜா பேராசையிலிருந்து விலகி இருக்க கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் வெற்றி சாத்தியமில்லை. அதிகாரத்தை எடுத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்கு நல்லது செய்ய தனக்கு கிடைக்கும் மிகச்சிறிய வாய்ப்பை மன்னர் விடக்கூடாது" என்று கூறினார்.

3. இறந்த நேரத்தில் ராவணன், "உங்கள் தேர் மற்றும் சகோதரனுடன் பகை கொள்ளாதீர்கள், அவை எப்போது வேண்டுமானாலும் தீங்கு விளைவிக்கும். நீங்கள் ஒரு வெற்றியாளராக எப்போதும் உங்களை நினைத்துக்கொள்ளாதீர், அது உங்களையே அழிவின் வழிக்கு கொண்டு செல்லும்"

4. இறக்கும் நேரத்தில் ராவணன், "உங்களை விமர்சிக்கும் அமைச்சர் அல்லது கூட்டாளியை எப்போதும் நம்புங்கள். மேலும், நான் அனுமனின் விஷயத்தில் செய்ததைப் போல உங்கள் எதிரியை ஒருபோதும் பலவீனமாகவோ அல்லது சிறியதாகவோ கருத வேண்டாம்." என குறிப்பிட்டுள்ளார்

ராவணின் இந்து இறுதி வாக்கியங்கள், உலகிற்கு பல கருத்துக்களை சொல்லும் வார்த்தைகளாக பார்க்கப்படுகிறது. 

Trending News