7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், அதிரடி முடிவெடுத்த அரசாங்கம்

மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க அரசு மறுத்துவிட்டது. அதாவது, ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தில் உயர்வு இருக்காது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 31, 2021, 02:59 PM IST
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், அதிரடி முடிவெடுத்த அரசாங்கம் title=

7th Pay Commission Latest News Today: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. ஜூலை 1 முதல் 28% அகவிலைப்படி அளிக்கப்படும் என்ற அறிவிப்புக்குப் பின்னர், அரசாங்கம் ஊழியர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க அரசு மறுத்துவிட்டது. அதாவது, ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தில் உயர்வு இருக்காது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

அரசாங்கம் கூறியது என்ன?

ஜூலை 28 அன்று நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய அரசு (Central Government) இதுபோன்ற எந்த விஷயத்தைப் பற்றியும் பரிசீலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

7 வது மத்திய ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய கட்டமைப்பில் ஊதியத்தை நிர்ணயிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே அனைத்து வகை ஊழியர்களுக்கும் 2.57-இன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் செயல்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ALSO READ: 7th Pay Commission DA Hike: ரூ.95,000 வரை உயரும் சம்பளம், கணக்கீடு இதோ!!

மாதாந்திர அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பதற்கான எண்ணம் இல்லை

இதில், 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் படி உதவித்தொகை மற்றும் அகவிலைப்படி முடக்கத்தை நீக்கிய பிறகு, ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பதை மத்திய அரசு இப்போது தீவிரமாக பரிசீலிக்கிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அப்படி எந்த எண்ணமும் இப்போது அரசுக்கு இல்லை என்றார்.

செப்டம்பரில் அதிகரித்த சம்பளம் வரும்

மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 17% டி.ஏ. (Dearness Allowance) பெறுகிறார்கள். ஆனால், ஜூலை 1, 2021 முதல் இது 28% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி அதிகரிப்பு செப்டம்பர் மாத சம்பளத்தில் வரும். டிஏ 2020 ஜனவரியில் 4 சதவீதமும், பின்னர் ஜூன் 2020 இல் 3 சதவீதமும், ஜனவரி 2021 ல் 4 சதவீதமும் அதிகரித்தது. இப்போது இந்த மூன்று தவணைகளையும் அரசு செலுத்த வேண்டும். ஆனால், ஊழியர்கள் இன்னும் 2021 ஜூன் மாதத்திற்கான அகவிலைபப்டி தரவுகளுக்காக காத்திருக்கிறார்கள். இந்த தரவு விரைவில் வெளியிடப்படலாம்.

AICPI-யின் தரவுகளின்படி, 7 வது ஊதியக்குழுவின் கீழ் 2021 ஜூன் மாதத்தில் அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு இருக்கும். இது நடந்தால், மொத்த டிஏ 31 சதவீதமாக அதிகரிக்கும். 31% செப்டம்பர் சம்பளத்துடன் வழங்கப்படும்.

DA உடன் HRA-வும் அதிகரித்தது

இது மட்டுமல்லாமல், அகவிலைப்படி அதிகரிப்போடு, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) அதிகரிக்கவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25% ஐ தாண்டியுள்ளதால், HRA அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவையும் 27% ஆக உயர்த்தியுள்ளது.

ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி 28%-லிருந்து 31 % ஆக உயரும்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News