7th Pay Commission: இந்த ஊழியர்களுக்கு அட்டகாச புத்தாண்டு பரிசு, அதிகரிக்கிறது ஊதியம்

மத்திய அரசு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டும் ஒருமுறை உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2021, 12:44 PM IST
  • இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான புத்தாண்டு பரிசு கிடைத்துள்ளது.
  • அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படியில் தற்போது நல்ல ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
  • இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும்.
7th Pay Commission: இந்த ஊழியர்களுக்கு அட்டகாச புத்தாண்டு பரிசு, அதிகரிக்கிறது ஊதியம் title=

7th Pay Commission update: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியின் வடிவத்தில், ஏற்கனவே பல நல்ல செய்திகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில், ஹரியானா மாநில அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான புத்தாண்டு பரிசு கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. 

ஹரியானா முதல்வர் மனோகர் லால், ஊழியர்களின் அகவிலைப்படியையும், ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தையும் மீண்டும் உயர்த்தியுள்ளார். இது தவிர, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பங்களிப்பும் 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு கிடைத்த இந்த பரிசுகளால் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் உயர்வு 

ஹரியானா அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தை மத்திய அரசின் வழியில் 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஹரியானா அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி தற்போது 315 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும்.

ALSO READ | மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி! யாருக்கு பலன் கிடைக்கும் 

பங்களிப்பில் அதிகரிப்பு

ஹரியானா அரசு தனது ஊழியர்களுக்கான (Central Government Employees) முதலாளிகளின் பங்களிப்பை ஜனவரி 1, 2022 முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மொத்த பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் பிறகு, ஊழியர்களுக்கு மாதந்தோறும் 25 கோடி மற்றும் ஆண்டுதோறும் 300 கோடி ரூபாய் பலன் கிடைக்கும். இது ஜனவரி 1, 2022 முதல் செயல்படுத்தப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கிறதா அகவிலைப்படி 

மறுபுறம், மத்திய அரசும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டும் ஒருமுறை உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின் படி, செப்டம்பர் 2021 வரை, அகவிலைப்படி 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இதன்படி அதில் 2 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது மேலும் 1 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2021க்குள் CPI(IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு ஏற்படுவது உறுதி. அதாவது மொத்த அகவிலைப்படி 3% முதல் 34% வரை அதிகரிக்கும். இது ஜனவரி 2022 முதல் வழங்கப்படும். இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் (Monthly Salary) மீண்டும் உயர்வு இருக்கும். 

ALSO READ | 7th Pay Commission பம்பர் செய்தி: அகவிலைப்படி அரியர் தொகை குறித்த முக்கிய அப்டேட் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News