கொலையாளிகள் எடுத்துக் கொண்ட ரெய்கி சிகிச்சை... ஆதிக் கொலை வழக்கில் நடந்தது என்ன!

உ.பி.யில் பயங்கரவாதத்திற்கு இணையான மாஃபியா  என கூறப்படும் அதிக் அகமது கடந்த சனிக்கிழமை இரவு, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​3 ஆசாமிகளால் சுடப்பட்டு இறந்தான். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 22, 2023, 04:19 PM IST
  • ஒருவர் ரெய்கி சிகிச்சைக்கு செல்லும்போது, ​​மற்ற இருவரும் அறைக்குள் தங்கியிருந்ததாக ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
  • பிரயாக்ராஜ் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள 'ஸ்டே இன்' என்ற ஹோட்டலில் தங்கியிருந்த கொலையாளிகள்.
கொலையாளிகள் எடுத்துக் கொண்ட ரெய்கி சிகிச்சை... ஆதிக் கொலை வழக்கில் நடந்தது என்ன! title=

உத்திர பிரதேசத்தில் பயங்கரவாதத்திற்கு இணையான மாஃபியா  என கூறப்படும் அதிக் அகமது கடந்த சனிக்கிழமை இரவு, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​3 ஆசாமிகளால் சுடப்பட்டு இறந்தான். இந்த வழக்கு குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அடிக் அகமது மற்றும் அஷ்ரப் ஆகியோரைக் கொன்ற மூன்று தாக்குதல்காரர்கள் விசாரணையில் சில புதிய ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளனர். சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், இவர்கள் 3 பேரும் தங்களுடைய மொபைல்களை ஓட்டலில் மறைத்து வைத்ததாக தெரிவித்தனர். அந்த ஹோட்டலில் இருந்து இரண்டு மொபைல்களை போலீசார் மீட்டனர். கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி ஆதிக் அகமது கொலை செய்யப்படுவதற்கு முன்பு, ஏப்ரல் 13ஆம் தேதி இந்த ஹோட்டலுக்கு இவர்கள் மூவரும் வந்ததாக ஹோட்டலில் இருந்து தற்போது தகவல் கிடைத்துள்ளது. மூன்று பேரும் ஏப்ரல் 13 முதல் 15 வரை இந்த ஹோட்டலில் தங்கியிருந்தனர், கொலைக்குப் பிறகு அவர்கள் இந்த ஹோட்டலுக்கு வரவிருந்தனர், ஆனால் அவர்கள் சரணடைந்தனர்.

ஆதிக் கொலை வழக்கில் மூன்று கொலையாளிகளான லவ்லேஷ், அருண் மற்றும் சன்னி ஆகியோர் ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு 8:30 மணியளவில் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள 'ஸ்டே இன்' என்ற ஹோட்டலை அடைந்தனர். இரவு 8:30 மணியளவில், ஹோட்டல் பதிவேட்டில் மூவரும் பதிவு செய்தனர். ஹோட்டல் ஸ்டே என்னும் ஹோட்டலின் அறை எண் 203 இல் துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பேர்களும் ஒன்றாகத் தங்கினர். ஆத்திக் மற்றும் அஷ்ரப் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, இந்த மூன்று கொலைகாரர்களும் ரெய்கி  சிகிச்சை எடுத்து கொள்ள ஒவ்வொருவராகச் சென்றனர்.

மேலும் படிக்க | 44 ஆண்டுகளாக மாபியாவாக பிரயாக்ராஜை மிரட்டி வந்த அதீக் அஹமத் 51 நாட்களில் சரிந்த கதை!

ரெய்கி சிகிச்சைக்காக தனியாக சென்ற கொலையாளிகள்

ஒருவர் ரெய்கி சிகிச்சைக்கு செல்லும்போது, ​​மற்ற இருவரும் அறைக்குள் தங்கியிருந்ததாக ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அறை எண் 203க்குள் ஆயுதங்களையும் வைத்திருந்தனர். ரெய்கி சிகிச்சை செய்ய, இவர்கள் ரிக்ஷாவில் செல்வார்கள், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் ஒன்றாக காட்சியளிப்பதை தவிர்த்தனர். அதிக் மற்றும் அஷ்ரப் கொலை செய்யப்பட்ட நாளான 15ஆம் தேதி காலை ஹோட்டல் ஸ்டே இன் ஹோட்டலின் 203ஆம் இலக்க அறையிலிருந்து இவர்கள் வெளியேறியுள்ளனர்.

சம்பவ இடத்திலேயே சரணடைந்த ​கொலையாளிகள்

கொலைக்குப் பிறகு அவர்கள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொள்ள திரும்பி வருவார்கள் என்பது அவர்களின் திட்டம், ஆனால் மூவரும் சம்பவ இடத்திலேயே சரணடைந்தனர். ஹோட்டலின் மேலாளரின் கூற்றுப்படி, ஏப்ரல் 16 ஆம் தேதி காலை, போலீசார் ஹோட்டல் ஸ்டே இன்னுக்கு வந்து, இங்குள்ள டி.வி.ஆர் மற்றும் சிசிடிவி கேமராக்களின் காட்சிகளுடன் ஹோட்டல் பதிவேட்டை எடுத்துச் சென்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம், இந்த மூன்று கொலையாளிகளும் எந்த நேரத்தில் வெளியேறினர், யாரேனும் அவர்களுக்கு ஆதரவளித்தார்களா என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஹோட்டலின் அறை எண் 203ல் இருந்து இரண்டு மொபைல் போன்களையும் போலீசார் மீட்டுள்ளனர். அவர்களிடம் சிம் மொபைல் எதுவும் கிடைக்கவில்லை. திட்டமிடுதலின் ஒரு பகுதியாக, இந்த மூன்று குற்றவாளிகளும் ஏற்கனவே மொபைல் சிம்களை தூக்கி எறிந்துள்ளனர், ஆனால் காவல்துறைக்கு சில எண்கள் கிடைத்துள்ளன, அதன் அடிப்படையில் கொலையாளிகளின் மற்ற கூட்டாளிகளை தொடர்பு கொள்ள போலீசார் முயற்சி செய்கிறார்கள். 

மேலும் படிக்க | டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்! கைது செய்ய சதித்திட்டம் -ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மேலும் படிக்க | உலகிலேயே உயர்ந்த மனிதர் டாக்டர் அம்பேத்கர்! 125 அடி உயர அம்பேத்கர் சிலை ஹைதராபாதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News