முழுஅடைப்பு விதிமுறைகளை மீறியதாக இதுவரை 1003 பேர் கைது...

திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் மாநில அரசு விதித்த முழுஅடைப்பு உத்தரவை மீறியதற்காக 24 மணி நேர இடைவெளியில் 1,000-க்கும் மேற்பட்டோர் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 24, 2020, 11:56 PM IST
முழுஅடைப்பு விதிமுறைகளை மீறியதாக இதுவரை 1003 பேர் கைது...  title=

திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் மாநில அரசு விதித்த முழுஅடைப்பு உத்தரவை மீறியதற்காக 24 மணி நேர இடைவெளியில் 1,000-க்கும் மேற்பட்டோர் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் பயத்தின் மத்தியில், மேற்கு வங்க அரசு மார்ச் 31 வரை மாநிலத்தில் முழு அடைப்பு அறிவித்தது. இந்நிலையில் மொத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறியதற்காக கொல்கத்தா காவல்துறையினரால் 1,003 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் (தெற்கு பிரிவில் இருந்து 271, 198 மற்றும் தெற்கு புறநகர் மற்றும் மத்திய பிரிவுகளைச் சேர்ந்த முறையே 118 பேர்).

வடக்கு மற்றும் தென்மேற்கு பிரிவுகளில், விதிகளை மீறியதற்காக தலா 99 பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் 97 பேர் கிழக்கு புறநகர் பிரிவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் "துறைமுக பிரிவில் இருந்து மொத்தம் 55 பேர் கைது செய்யப்பட்டனர்" என்று அந்த அதிகாரி கூறினார்.

நாகா சோதனை மற்றும் ரோந்துப் பணியின் போது, ​​தென்கிழக்கு பிரிவைச் சேர்ந்த மேலும் 58 பேரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர், மேலும் கிழக்குப் பிரிவில் இருந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அவர்கள் அனைவர் மீதும் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவின் கீழ்ப்படியாமை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும் ..." என்றும் அந்த மூத்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களைத் தேவைப்படாவிட்டால் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், அரசாங்கம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் பலமுறை கேட்டுக்கொண்டார். எனினும் மக்கள் அரசு உத்தரவினை பின்பற்றியதாக தெரியவில்லை, இந்நிலையில் அரசு உத்தரவினை மீறியதாக தற்போது 1000-க்கு மேற்பட்டோர் கைத் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை ஒன்பது பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் திங்கள்கிழமை பிற்பகல் நகர மருத்துவமனையில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News