நல்லோஸ்பராவில் 19 வயதுடைய தலையில்லா சடலம் மீட்ப்பு...

மகாராஷ்டிரா நல்லாசோபராவில் பகுதியில் 19 வயதுடைய ஊழியரின் தலையில்லா சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்!  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2018, 02:29 PM IST
நல்லோஸ்பராவில் 19 வயதுடைய தலையில்லா சடலம் மீட்ப்பு... title=

மகாராஷ்டிரா நல்லாசோபராவில் பகுதியில் 19 வயதுடைய ஊழியரின் தலையில்லா சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்!  

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள நல்லாசோபரா பகுதியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 19 வயதுடைய ஊழியரின் தலையில்லா சடலத்தை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் விகாஸ் பாவ்ஹேன் எனவும் அடையாளம் கண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து துலிஞ்ச் காவல்துறையினர் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்டவரின் தலையில் ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டு சுற்றியுள்ள நிலையில் ஒரு உடல் திங்கள்கிழமை அன்று நள்ளாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு பின்னர் குற்றம் இழைக்கப்படும் நோக்கம் அறிந்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், தலையில்லா நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

 

Trending News