நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது உடலுக்கு நல்லதா?

சில நேரங்களில் வேலை காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ மக்கள் நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது உண்டு. அது அவர்களை சிக்கலான நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்பது அறிய வேண்டிய ஒன்று...

Last Updated : Aug 26, 2019, 10:29 AM IST
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது உடலுக்கு நல்லதா? title=

சில நேரங்களில் வேலை காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ மக்கள் நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது உண்டு. அது அவர்களை சிக்கலான நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்பது அறிய வேண்டிய ஒன்று...

நீண்ட நேரம் சிறுநீர் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது மருத்துவர்கள் அறிவுரை. ஒரு நபர் தொடர்ந்து நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அது அவரது உடல் பாகங்களை சேதமடையச் செய்யலாம் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பழக்கம் தீவிர வடிவத்தை எடுக்கும்போது ஆபத்தானது என்பதை நிரூபிக்கும். 

ஒருவர் நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் தேக்கி வைத்திருந்தால் எவ்வளவு சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்பதை இங்கே நாங்கள் உங்களுக்கு கூறப்போகிறோம்.

---சிறுநீரக பாதிப்பு---
சிறுநீரை நிறுத்துவது சிறுநீரகங்களின் அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதில் வடுக்கள் ஏற்படுத்துவதால் எதிர்காலத்தில் கடுமையான சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும். சில ஆய்வுகள் சிறுநீரைத் தடுப்பதும் சிறுநீரக கல்லுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.

---கடுமையான வலி---
சிறுநீரை அதிக நேரம் நிறுத்துவது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரிக்கும், இது வலியை ஏற்படுத்தும். இந்த வலி சிறுநீரகத்தையும் அடையலாம். இந்த சூழ்நிலையில், ஒருவர் சிறுநீரை கழித்த பின்னர் வலியிலிருந்து நிவாரணம் பெறுவார். சிறுநீரை கழித்த பின்னர் வலியிலிருந்து நிவாரணம் பெறுவார் என்றபோதிலும் எதிர்காலத்தில் கடுமையான சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

---சிறுநீர்ப்பை சேதம்---
மீண்டும் மீண்டும் சிறுநீர் தடுப்பதால் சிறுநீர்ப்பையின் அளவை அதிகரிக்கலாம் மற்றும் அதன் சதைகளை விரிவுபடுத்தலாம். இந்த மாற்றங்கள் சிறுநீரைக் கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கிறது. அது மட்டுமல்லாமல், பல சூழ்நிலைகளில், சிறுநீரை வெளியிடுவதும் பிளேடருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கல் ஒரு தீவிர வடிவத்தையும் எடுக்கலாம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு நம்மை கொண்டுச்செல்லலாம்

---சிறுநீர் பாதை தொற்று---
சிறுநீரைத் தடுப்பதால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சமும் உள்ளது. உண்மையில், கழிப்பறை சுத்தமாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நாம் அங்கு சிறுநீர் கழிக்க போகும்போது, ​​பாக்டீரியா வளர வாய்ப்பு கிடைக்கக்கூடும், இது சிறுநீக பை வரையிலும் பாதிக்கலாம். இந்த தொற்று பல தீவிர நோய்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News