மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி: 50% அகவிலைப்படி, இன்னும் பல புத்தாண்டு பரிசுகள்

7th Pay Commission: 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 15, 2023, 02:49 PM IST
  • அகவிலைப்படி ஜனவரி 2024 புத்தாண்டில் அதிகரிக்கும்.
  • AICPI Index: இதன் நிலை என்ன?
  • மக்களவை தேர்தலுக்கு முன் அறிவிப்பு வெளியாகலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி: 50% அகவிலைப்படி, இன்னும் பல புத்தாண்டு பரிசுகள் title=

7வது ஊதியக்கமிஷன், சமீபத்திய செய்திகள்: 2023 ஆம் ஆண்டைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல பரிசுகள் காத்திருக்கின்றன. 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்கலாம். இதன் காரணமாக ஊழியர்களின் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் ஏகப்பட்ட அதிகரிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மதிப்பீட்டை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்திற்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளில் இருந்து இது மதிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. அவையும் வந்த பின்னர்தான் ஜனவரி 2024 இல் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரியும். 

அகவிலைப்படி ஜனவரி 2024 புத்தாண்டில் அதிகரிக்கும்

தற்போது, ​​மத்திய ஊழியர்கள் 46 சதவிகித அகவிலைப்படியை (Dearness Allowance) பெற்று வருகிறார்கள். இது ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான காலக்கட்டத்திற்கானது. அடுத்த டிஏ உயர்வு (DA Hike) 2024 ஜனவரியில் இருக்கும். இது ஹோலி பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்படும். ஊழியர்களின் அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் விகிதங்கள்- ஏஐசிபிஐ குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்து. இது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தியமைக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூலையில் அகவிலைப்படி மொத்தம் 8% அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது இது மீண்டும் 2024 ஆம் ஆண்டில் திருத்தப்படும். இது ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான AICPI குறியீட்டுத் தரவைப் பொறுத்தது.

AICPI Index: இதன் நிலை என்ன?

ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) சமீபத்திய புள்ளிவிவரங்கள் 138.4 மதிப்பெண்களைக் காட்டுகின்றன. இதில் 0.9 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான தரவு இது. நவம்பர் மாத இறுதியில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தரவு வரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரு முறை அகவிலைப்படியில் மாற்றம் ஏற்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைபப்டி திருத்தப்படுகின்றது. முந்தைய ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களின் ஏஐசிபிஐ தரவின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் (DA), ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!! EMI சுமை கூடும்.... MCLR விகிதங்களை உயர்த்தியது வங்கி

நவம்பர் 30 அன்று, தொழிலாளர் அமைச்சகம் அக்டோபர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களை புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அதில் 0.9 புள்ளிகள் அதிகரிப்பு உள்ளது. அதன் பிறகு, எண்ணிக்கை 138.4 ஐ எட்டியது. டிஏ மதிப்பெண் 49% ஐ எட்டியுள்ளது. இதன் காரணமாக புதிய ஆண்டில் 4% அல்லது 5% டிஏ ஹைக் இருக்கலாம் என்ற ஊகங்கள் உள்ளன. 

50% அகவிலைப்படி

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்களின் அதிகரிப்புக்குப் பிறகு, அகவிலைப்படி குறைந்தபட்சம் 50% என்ற நிலையை எட்டும். 7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் படி அகவிலைபடி 50 சதவிகிதத்தை எட்டும்போது ஊழியர்களின் சம்பளம் திருத்தப்படும். டிஏ 50 சதவீதத்தை எட்டியவுடன் அகவிலைப்படி பூஜ்ஜியமாக மாற்றப்பட்டு, தற்போதுள்ள அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கபப்டும். அதன் பிறகு அகவிலைப்படி அதிகரிப்பு பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும். இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் செய்யப்படவில்லை.

மக்களவை தேர்தலுக்கு முன் அறிவிப்பு வெளியாகலாம்

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மே மாதத்திற்குள் மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்பதால், அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வரும். ஆகையால் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அடுத்த டிஏ விகிதங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, மத்திய அரசால் டிஏவை உயர்த்த முடியாது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களை (Central Government Employees) மகிழ்விக்கும் வகையில், பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மோடி அரசு டிஏ குறித்து முடிவெடுக்கலாம் என நம்பப்படுகிறது. அகவிலைபப்டி 4% கூடினால், மொத்த அகவிலைப்படி 50% ஆகிவிடும். இதனால் 48 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பலனடைவார்கள்.

மேலும் படிக்க | ITR தாக்கலில் மறக்கக்கூடாத 6 விதிகள்: மறந்தால் வீடு தேடி வரும் வருமான வரி நோட்டீஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News