Thoothukudi Rain Update: தூத்துக்குடி அருகே உள்ள பிரதான கோரம்பள்ளம் குளம் உடைந்துள்ளதாகவும், இதனால் நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
TN Rain Updates: விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களில் இன்று முழுவதும் தொடர் மழை இருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Relief Funds: சென்னை எண்ணூர் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயுடன், 12 ஆயிரத்து 500 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என புயல் மழை கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் தெரிவித்தார்.
சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும், இல்லையென்றால் வெள்ள பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று மனைவி உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு காரில் படுவேகமாக தப்பிச் சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு சென்றது ஏன்? என்ன நடந்தது என்பதை காணலாம்.
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பூர்வீகப் பாசனப் பகுதி நிலங்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2 Exam Result: குரூப்-2 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
Tamilnadu Latest News: தமிழகத்தில் ஒரு பெண் ஆளுமை வளர்வதை திமுக அரசு விரும்பவில்லை எனவும் மத்திய அரசும், மாநில அரசும் பாதிக்ப்பட்ட மீனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திருமண நிகழ்ச்சிக்காக அமைச்சர்களை வரவேற்க சாலையோரம் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் கீழே விழுந்ததில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி காயமடைந்துள்ளார். அதேபோல சென்னையில் கொடிகம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நிழந்துள்ளது. இந்த இரு சம்பவங்களிலும் நடந்தது என்ன என்பதை காணலாம்.
Edappadi Palanisamy: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தல் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புழல் மத்திய சிறையில் பட்டப்பகலில் பெண் கைதி ஒருவர் தப்பிஓட்டிய நிலையில் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உயர்பாதுகாப்பு கொண்ட சிறையில் இருந்து கைதி தப்பியது எப்படி எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு கார்த்தி சிதம்பரம் பிரியங்கா காந்தியின் உதவியை நாடியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் நெளஷாத் வழங்க கேட்கலாம்.
இரண்டு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு ரவுடியை மற்றொரு ரவுடி கொடூரமாக கொலை செய்த சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது. யார் இந்த ரவுடிகள்? இவர்களுக்குள் மோதல் ஏற்பட காரணம் என்ன?
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல் வழங்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.