ஞானவேல் ராஜா மீது பகீர் புகார்... தற்கொலைக்கு முயன்ற பணிப்பெண் - நடந்தது என்ன?

Complaint On Producer Gnanavel Raja: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 25, 2024, 05:40 PM IST
  • சில நாள்களுக்கு முன் ஞானவேல் ராஜாவின் வீட்டில் இருந்து நகைகள் காணாமல் போயுள்ளது.
  • இதில், ஞானவேல் ராஜா குடும்பத்தினர் பணிப்பெண் மீது சந்தேகம் அடைந்துள்ளனர்.
  • தொடர்ந்து, பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஞானவேல் ராஜா மீது பகீர் புகார்... தற்கொலைக்கு முயன்ற பணிப்பெண் - நடந்தது என்ன? title=

Complaint On Producer Gnanavel Raja: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் வீடு சென்னை தியாகராய நகரில் உள்ள ஜெகதீஸ்வரன் தெருவில் உள்ளது. அவர்களது வீட்டில் லட்சுமி என்ற பணிப்பெண் வீட்டு வேலைகளை செய்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஞானவேல் ராஜாவின் வீட்டில் இருந்து சில நகைகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பணிப்பெண் லட்சுமி மீது ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா சந்தேகம் அடைந்துள்ளார். லட்சுமியிடம் நகைகள் காணாமல் போனது குறித்து விசாரித்து இருக்கிறார்.

ஞானவேல் ராஜா அளித்த புகார்

முதல் நாள் நேஹா, லட்சுமியிடம் நகைகள் குறித்து விசாரித்த நிலையில், மறுநாளில் இருந்து லட்சுமி பணிக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் அவரை தொடர்பு கொண்டால் லட்சுமியின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த நேஹா தனது கணவர் ஞானவேல் ராஜாவிடம் இதுகுறித்து தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீசாகும் 'பில்லா' திரைப்படம்.. அதுவும் அஜித் பிறந்தநாளில்

பிரச்சனைகளை கேட்ட ஞானவேல் ராஜா உடனடியாக தனது உதவியாளர் மூலம் நகைகள் காணாமல் போனது குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த புகாரில் தங்கள் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் லட்சுமி மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தற்கொலைக்கு முயன்ற பணிப்பெண்

இதனை அடுத்து லட்சுமியை அழைத்து காவல்துறையினர் காணாமல் போன நகைகள் குறித்து விசாரித்து இருக்கிறார்கள். இதற்கு அடுத்த நாள் லட்சுமி தற்கொலைக்கு முயன்று உள்ளார் என கூறப்படுகிறது. இதை பார்த்த உறவினர்கள் உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில்தான் லட்சுமியின் மகள் மாம்பலம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மீதும் தனது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா நகைகளை வேறு எங்கோ தொலைத்து விட்டு தனது தாயார் லட்சுமி மீது பழிப் போடுகிறார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞானவேல் ராஜாவின் திரைப்படங்கள்

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு உறவினர் ஆவார். ஞானவேல் ராஜா 'பருத்திவீரன்' திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருப்பினும் 'பருத்திவீரன்' திரைப்படத்தில் ஞானவேல் ராஜாவுக்கும், இயக்குநர் அமீருக்கும் கடும் பிரச்னை நிலவுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கூட அப்பிரச்னை மீண்டும் பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டது. 

தொடர்ந்து, சூர்யா, கார்த்தி ஆகியோரின் பல்வேறு திரைப்படங்களை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தற்போது கூட இவர் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் பெரும் பொருட்செலவில் 'கங்குவா' திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும், விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'தங்கலான்' திரைப்படமும் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் உருவானதுதான்.

(தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)

மேலும் படிக்க | சிக்கலில் நடிகை தமன்னா.. சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News