புவனேஸ்வரில் உள்ள ஒடிசா-வின் "ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சைன்ஸ்(AIIMS)’-ல் MBBS படித்து வந்த காஷ்மீர் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
அரசு உதவி பெறும் பள்ளியின் "படிக்க சொன்னனதால்" தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திவிட்டு 11-ம் வகுப்பு மாணவர் தப்பியோடி சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதத்திலும், வெளி மாநிலத்தவர்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் புகுத்தும் விதத்திலும் நடைபெற்ற தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தலைமை ஆசிரியர் தண்டித்ததால் 5-ம் வகுப்பு மாணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.
உ.பி., மாநிலம் கோரக்பூர் மாவட்டம் உள்ள செயின்ட் அந்தோனி பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவன் நாவ்நீத் (வயது 11) வகுப்பு தலைமை ஆசிரியை பாவனா ஜோசப் தண்டித்ததால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்ச்சி செய்துள்ளான். இதை அறிந்த பெற்றோர் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மாணவன் நேற்று உயிரிழந்தான்.
பள்ளியில் இறந்த மாணவனுக்கு உள்ளூர் மக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி பிரத்தனை செய்தனர்.
ஹரியானா மாநிலம் குர்கான் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் 7 வயது மாணவன், பள்ளியின் கழிவறை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரயான் இன்டர்நேஷனல் பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் பாதுகாவலர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உள்ளூர் மக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி 7 வயது சிறுவனுக்காக பிரத்தனை செய்தனர்.
சேலம் தனியார் பஸ்ஸில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இரவு 9 மணிக்கு சேலத்தில் இருந்து ஓமலூர் அருகே உள்ள நார்ணம்பாளையத்திற்கு ஒரு தனியார் பஸ் சென்றது. நேற்றிரவு 10 மணிக்கு அந்த பஸ் நார்ணம்பாளையம் சென்றடைந்தது. அப்பொழுது பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி சென்றனர்.
ஆனால், சிறுமி பஸ்சுக்குள் வைத்து மணிவண்ணன், முருகன் மற்றும் பெருமாளிடம் உட்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்க கூடாது என்று பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மார்ச் 2-ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த இருந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து சாதிக் பாட்ஷா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாணவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என்று உத்தரவிட்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளானர்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.