சென்னை-ல் கல்லூரி வாசலில் மாணவி கத்தியால் குத்தி படுகொலை!

சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவியை இளைஞர் ஒருவன் கத்தியால் குத்தி படுகொலை செய்து உள்ளான். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு உள்ளது.

Last Updated : Mar 9, 2018, 04:26 PM IST
சென்னை-ல் கல்லூரி வாசலில் மாணவி கத்தியால் குத்தி படுகொலை! title=

சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவியை இளைஞர் ஒருவன் கத்தியால் குத்தி படுகொலை செய்து உள்ளான். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு உள்ளது. 

சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரியில் பி.காம். படித்து வரும் மாணவி அஷ்வினி. இந்நிலையில் கல்லூரி வாசலில் மாணவி அஷ்வினியை இளைஞர் ஒருவன் கத்தியால் குத்தியிருக்கிறார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவி அஷ்வினியை பொதுமக்கள் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அஷ்வினி பரிதாபமாக மரணமைதார்..

இதனிடைய அஷ்வினியை கத்தியால் குத்திய இளைஞனை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Trending News