ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் பிரச்சனையை தீர்க்க ஏர்டெல் நிறுவனம் முன்வந்து இருக்கிறது. இதனால் ஏர்செல்லின் சிக்னல் பிரச்சனை படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் தேசிய வங்கியில் நடைப்பெற்றுள்ள ரூ.21306 கோடி மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்!
பக்கோடா விற்பது கூட பட்டதாரிகளுக்கான ஒரு வேலை வாய்ப்பு தான் என பிரதமா் மோடி கூறியதைத் அடுத்து புதுவை முதல்வர் நாராயண சாமி பக்கோடா விற்கும் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அணைகளிலும் குறிப்பிட்ட அளவு நீரின் மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 3 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும், அதேவேளையில் சில இடங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களை நான் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசு தான் நேரடியாக நியமித்துள்ளது. மேலும் இது சட்டப்படி தான் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அரசுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த விவகாரம் சரி செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பந்த் போராட்டம் தொடங்கியது. இதனையடுத்து புதுச்சேரியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக பல்வேறு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழையின் அளவு நீலகிரி மாவட்டத்தில் 5 செ.மீ மழை பெய்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் கவர்னர்ரான கிரண்பேடி முதல் அமைச்சர் நாராயணசாமியுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட்டுள்ளார்.
புதுச்சேரியில் மருத்துவ முதுகலை படிப்புக்கான கலந்தாய்வின்போது புதுச்சேரி துணைநிலை கவர்னராகப் பதவி வகிக்கும் கிரண் பேடி அதிரடியாகச் செயல்பட்டார். அப்போது, மருத்துவக் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறவில்லை என்றும், புதுச்சேரி முதல்வரின் ஆட்சி குறித்தும் கிரண் பேடி சமூக வலைதளத்தில் புகார்கள் பதிவிட்டு வந்தார்.
இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
மத்திய அரசின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரளா மற்றும் புதுச்சேரி அரசு கூறி உள்ளது.
மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை என்ற மத்திய அரசின் சட்டத்தை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பசு, காளை, கன்று, ஒட்டகம் இறைச்சி விற்கப்படுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவாதங்கள் நடைபெற்றன.
அப்பொழுது முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-
மாட்டு இறைச்சிக்கு எதிராக மத்திய அரசு தடை விதித்ததை புதுச்சேரி அரசு சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். யார் என்ன உணவை உண்ண வேண்டும் என்பதை மத்திய அரசு வற்புறுத்த இயலாது. நாடு முழுவதும் 40 சதவீத மக்கள் அசைவ உணவு உண்பவர்கள்.
புதுச்சேரியில் நிலவும் கடும் வெயில் காரணமாக ஏப்ரல் 22-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் மூட புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஏப்ரல் 22-ம் தேதி முதல் மூடப்படும் என அந்த அறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஏற்பட்ட மின்தடையால் 3 நோயாளிகள் பலி
புதுச்சேரி அரசு மருத்துமனையில் ரத்தசுத்திகரிப்புச் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட சுசீலா (77), அம்சா (55), கணேஷ் (54) ஆகிய மூன்று பேருக்கு இன்று சிகிச்சை நடத்தப்பட்டது. நோயாளிகளுக்கு இயந்திரம் மூலம் ரத்த சுத்திகரிப்பு நடக்கும் போது மின்சாரம் மருத்துவமனையில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
வளமான புதுச்சேரி என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் பதவியேற்று பிறகு அனைத்துத் துறை செயலர்கள், உயர் அதிகாரிகளை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக புதுவையில் சிறப்பான நிர்வாகத்தை இழந்து விட்டது. மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் சரியாக செயல்படுத்தப்படவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.