பேருந்து கட்டண உயர்வு: தொடர் போராட்டத்தில் மாணவர்கள்!!

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Last Updated : Jan 25, 2018, 02:22 PM IST
பேருந்து கட்டண உயர்வு: தொடர் போராட்டத்தில் மாணவர்கள்!! title=

தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு கடந்த 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இன்று 4-வது நாளாக பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த கட்டண உயர்வுக்கு மக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு பஸ் பாஸ் நீடிக்கும் எனவும் அதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

ஆனாலும் மாணவர்கள் கட்டண உயர்வை குறைக்காமல் திரும்ப மாட்டோம் என கல்லூரிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைதொடர்ந்து தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பேருந்து கட்டணங்களை உயர்த்தி அந்த அரசு உத்தரவிட்டுள்ளது.

நாகை பாரதிதாசன் பல்கலைகழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்ட வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பொதுமக்கள் உட்பட பலர் எதிர்த்து தெரிவித்தனர். 50 சதவீதம் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை மாணவர்களும், கூலி வேலைக்கு செல்பவர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. 

எனவே கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி இந்திய மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பாக தரையில் அமர்ந்து போராட்டி வருகின்றனர்.

கும்பகோணம் அரசு தன்னாட்சி கல்லூரி மாணவ, மாணவிகள் 2000 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பெரம்பலூர் செட்டுக்குளம் பகுதியில் கட்டண உயர்வை கண்டித்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் போரட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

அரசு பேருந்து கட்டணம் இரட்டிப்பாகியுள்ளதால் அன்றாடம் கல்லூரி வந்து செல்வதே கேள்விக்குறியாகியுள்ளதாக மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். படிப்பதற்காக கல்லூரிக்கு வருவதா அல்லது பேருந்துக்கு கட்டணம் செலுத்துவதற்காக வேலைக்கு செல்வதா என்று மாணவர்கள் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

 

 

 

Trending News