தற்போது பெய்து வரும் மழையால் தேங்கியுள்ள தண்ணீர் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவற்றை சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் பெய்து வரும் மழையில் கொரட்டூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சனிக்கிழமை பருவமழை தொடங்கிய நிலையில், இந்த மழைப்பொழிவு நவம்பர் 4 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும் இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்திலிருந்து ராயலசீமா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இதுதொடர்பாக வானிலை மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழக கடற்கரையை ஒட்டி (5.8 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு பருவமழை தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. டிசம்பர் மாதத்திலும், தொடரும் மழையால், தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிக்கைகளை பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.