வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் வாழை விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், பொங்கலையொட்டி தற்போது வாழைத்தார் மற்றும் வாழை இலையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வேளச்சேரியில் உள்ள பாலாஜிநகரில், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு எந்தவித அத்தியாவசிய உதவியும் வழங்கவில்லை என மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
கனமழை காரணமாக சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து மழை நீர் பெருக்கெடுத்து வெளியேறுகிறது. பிரதான சாலையில் மழை நீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 14-ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக ஓடையை ஒட்டியுள்ள திருவள்ளூர் நகரில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.