வேப்பேரி சாலையில் காவலரின் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து ஆய்வாளர். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய் அபராதம்.
இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். குறிப்பாக வட மாநிலங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை பார்க்க முடிகிறது - ஜோதிமணி.
சென்னையில் செவிலியர் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்ட நிலையில் கை கால்கள் துண்டாகி பச்சிளம்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி என்ன இப்போது பார்க்கலாம்
எட்டயபுரம் அருகே துக்க வீட்டில் பட்டாசு வெடித்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் வாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை இதில் காணலாம்.
மதுரை என்றாலே நன்றி மறவா மக்கள் பாசக்காரங்க என்பதற்கு உதாரணமாக மதுரை சூர்யாநகரை சேர்ந்த முன்னாள் மாணவர் ஆசிரியர்களை வீட்டிற்கே அழைத்து வந்து விருந்து கொடுத்துள்ளார்.
இன்று உலகம் என்றும் தொழிலாளர் தினத்தை மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூர் மாநகரில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்ற மே தின பேரணி நடைபெற்றது.
திருச்சி அரியமங்கலத்தில் பட்டப் பகலில் இன்று அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வன்கொடுமைகளுக்கு எதிராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அரச முத்துபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Chennai Crime News Updates: சென்னையில் சாலைகளில் சுற்றித் தெரியும் நாய்கள் மற்றும் பூனைகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடி இறைச்சிக்காக விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நவக்கிரகக்களில் நன்மையை தரக்கூடிய, சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி் ஆவார். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார்.
Bus Accident In Yercaud, Salem Accident News : ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Nirmala Devi Case : நிர்மலா தேவி வழக்கு : கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு திருவில்லிப்புத்தூர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மாதவரம் பால் பண்ணை அடுத்த மாத்தூரில் குடிபோதையில் இளைஞர்கள் ஆட்டோ மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை பட்டாக்கத்தியால் அடித்து உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.