18 MLA-கள் தகுதி நீக்க வழக்கு; திமுக-விற்கு நன்மை பயக்குமா?

18 MLA-கள் தகுதி நீக்க வழக்கில் நல்லதே நடக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 14, 2018, 01:40 PM IST
18 MLA-கள் தகுதி நீக்க வழக்கு; திமுக-விற்கு நன்மை பயக்குமா? title=

18 MLA-கள் தகுதி நீக்க வழக்கில் நல்லதே நடக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்!

டிடிவி தினகரன் ஆதரவு MLA-க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் இன்று வழங்கப்படுகிறது. இந்த தீர்பானது ஆதிமுக-விற்கு ஆதரவாக தான் அமையும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA-க்கள், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். 

இது குறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்ககோரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான தமிழக கவர்னரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, முதல்வருக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. வழங்கப்படும் தீர்ப்பு அதிமுக-விற்கு எதிராக அமையும் பட்சத்தில் ஆட்சி மாற்றம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News