என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்?... களத்தில் குதித்த அண்ணாமலை

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து ட்வீட் செய்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில் என கேள்வி எழுப்பியுள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 17, 2022, 04:44 PM IST
  • கள்ளக்குறிச்சியில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்
  • அவரது உயிரிழப்பு நரபலியாக இருக்கலாம் என அவரது தாய் தெரிவித்தார்
  • இன்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது
என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்?... களத்தில் குதித்த அண்ணாமலை title=

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். 

சில நாள்களுக்கு முன்பு அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | தமிழகத்தில் கலவரம்... போலீசார் துப்பாக்கி சூடு! வாகனத்திற்கு தீ வைப்பு!

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி தமிழ்நாடு அரசு மீதும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,“என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில். திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். காவல் துறையினர் மீது மரியாதை இழந்துவிட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும்வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்.

 

உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார். மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

Kallakkurichi

தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும்  பாஜக இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக, தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. ஆனால் அந்தப் போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த விவகாரத்தை சிலர் அரசியல் நோக்கத்தோடு கையாள்வதை நிறுத்திவிட்டு மாணவியின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டுமென்பதே சமூக செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News