ஆர்.கே.நகர் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவு!!

Last Updated : Mar 22, 2017, 10:26 AM IST
ஆர்.கே.நகர் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவு!! title=

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் 16-ம் தேதி துவங்கியது.

ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான வேட்பு மனு தாக்கல், 16-ம் தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளையுடன் கடைசி நாளாகும். 24-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். மனுவை திரும்ப பெற விரும்புவோர் 27-ம் தேதி மாலை 3:00 மணிக்குள் பெற வேண்டும். அன்று மாலை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 12-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 15-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 

இந்த தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். ஓபிஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். ஜெ., அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடுகிறார். திமுக சார்பாக மருது கணேஷ் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ப.மதிவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியும் இந்த தொகுதியில் போட்டியிடும் என அறிவித்துள்ளது.

Trending News