சட்டசபைக்கு வந்தடைந்தார் மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் நடக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து அடைந்தார்.

Last Updated : Feb 18, 2017, 10:10 AM IST
சட்டசபைக்கு வந்தடைந்தார் மு.க.ஸ்டாலின் title=

சென்னை: சட்டசபையில் நடக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து அடைந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோருகிறது. கூவத்தூரில் இருந்து ஆதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்கள் கார்களில் பலத்த பாதுகாப்புடன் வந்துள்ளனர்.
ஒவ்வொரு அமைச்சரின் காரிலும் சுமார் 5 எம்.எல்.ஏக்கள் வரை அடைத்து வைத்துக் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மறுபக்கம் திமுக செயல் தலைவர், மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வீட்டிலிருந்து கிளம்பி சட்டசபைக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் கூடவே புறப்பட்டு வந்தனர். மற்ற எம்.எல்.ஏக்களும் புறப்பட்டு வருகின்றனர்.

Trending News