Cornoa Test: கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டது ஏன் தெரியுமா?

 கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்துக் கொளவதற்கான கட்டணம் 900 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 21, 2021, 06:55 AM IST
  • கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டது
  • தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் 900 ரூபாய்
  • முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனைக்கான கட்டணம் 550 ரூபாய்
Cornoa Test: கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டது ஏன் தெரியுமா? title=

சென்னை: கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்துக் கொளவதற்கான கட்டணம் 900 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு தற்போது 1200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. RT-PCR என்ற கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை1,200 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக குறைத்துள்ளது தமிழக அரசு.

இது தொடர்பாக தமிழக மருத்துவத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

Also Read | கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு: தமிழக அரசு

கடந்த மே 14-ம் தேதி, கொரோனா தொற்று சிகிச்சை கட்டணம் தொடர்பான உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனைக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் பரிந்துரைத்துள்ளார். இதை பரிசீலித்த தமிழக அரசு, கட்டணத்தை குறைவாக நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றை உறுதிப்படுத்தும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அரசு மற்றும் அரசால் பரிந்துரைக்கப்படும் மாதிரிகள் தனியார் ஆய்வுக் கூடங்களில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.550 ஆகவும், குழு மாதிரிகளுக்கு ரூ.600-ல் இருந்து ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது.

Also Read | Adi Shankaracharya Jayanti : இந்து மதத்தின் மாபெரும் சிற்பி ஆதி சங்கரரின் ஜெயந்தி 

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட (Chief Minister's Comprehensive Insurance Scheme) பயனாளியாக இல்லாதவர்கள், தனியார் ஆய்வுக் கூடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்ய கூடுதலாக ரூ.300 நிர்ணயிக்கப்படுகிறது.

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கான தொகையை யுனைட்டட் இந்தியா காப்பீடு நிறுவனம் (United India Insurance) மறு பரிசீலனை செய்த பிறகு திருப்பிக் கொடுக்கும்” என்று தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Also Read | வெள்ளிப் பாத்திரங்களில் வைத்த உணவை கொடுப்பது குழந்தைக்கு  நல்லதா? அறிவியல் சொல்வது என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News