காவிரியில் தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்த அதிமுக: மு.க.ஸ்டாலின்!

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசு பறிகொடுத்துவிட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 16, 2018, 01:25 PM IST
காவிரியில் தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்த அதிமுக: மு.க.ஸ்டாலின்! title=

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசு பறிகொடுத்துவிட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்:- காவிரியில் தமிழகத்துக்கு நீர் குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றார்.

மேலும் அவர், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி. காவிரி தண்ணீரின் அளவு, தற்போது 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும், காவிரி நீர் திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றம் அவ்வப்போது பிறப்பித்த உத்தரவுகளையும் மதிக்காத கர்நாடக மாநிலத்திற்கு, ஏற்கனவே வழங்கப்பட்டதை விட கூடுதலாக 14.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து இருக்கிறது.

எனவே, புவியியல் மற்றும் சரித்திரரீதியாக தமிழகத்திற்கே உரித்தான காவிரி நீரைப் பெறுவதற்கான, நியாயமான ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் போதிய அளவில் முன்வைக்கத் தவறிய அதிமுக அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். எனவே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

Trending News