177.25 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை  திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Last Updated : Feb 16, 2018, 11:11 AM IST
177.25 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும்: உச்ச நீதிமன்றம்!  title=

காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. 

செப்டம்பர் 20-ம் தேதி வாதங்கள் முடிவடைந்த பின்னர், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் கழித்து காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம்  இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி இரு மாநிலங்களிலும் விவசாயிகளும் எதிர்பார்ப்பில்இருந்தனர் 

இது தொடர்பாக தற்போது தீர்ப் வழங்கிய உச்சநீதிமன்றம் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை  வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Trending News