10-ம் வகுப்பு மாணவனுடன் ஓடிய 35 வயது பெண்! போக்சோ சட்டத்தில் கைது!

காதல் கண்ணை மறைக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம்,ஆனால் கட்டிய கணவன்,பெற்ற பிள்ளைகளை கூடவா மறக்கும் அளவிற்கு காதல் இருக்கும்? அப்படி தான் இங்கு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2021, 08:49 PM IST
10-ம் வகுப்பு மாணவனுடன் ஓடிய 35 வயது பெண்! போக்சோ சட்டத்தில் கைது! title=

திருவாரூர் : காதல் கண்ணை மறைக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம்,ஆனால் கட்டிய கணவன்,பெற்ற பிள்ளைகளை கூடவா மறக்கும் அளவிற்கு காதல் இருக்கும்? அப்படி தான் இங்கு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 90'ஸ் கிட்ஸ்கள் ஒருபுறம் கல்யாணம் ஆகவில்லையே என்று கவலைப்படுகிறார்கள்,ஆனால் நம் 2k கிட்ஸ்களின் அலப்பறையோ சொல்ல வார்த்தையில்லை.தன்னைவிட வயதில் மூத்தவர்களை காதலிப்பதையை ஃபேஷனாக வைத்துள்ளனர்.ஒருவேளை தன்னைவிட வயதில் மூத்தவர்களால் தான் தங்களை நன்றாக பார்த்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள் போலும்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்காவில் தேதியூர் தெற்கு தெருவில் வசித்து வருபவர் பாலகுரு-ராசாத்தி தம்பதியர். இவர்களுக்கு பரத் என்கிற மகனும், சாரதி, பாரதி என்ற மகள்களும் உள்ளனர்.பரத் எரவாஞ்சேரி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த குடும்பம் வசிக்கும் அதே தெருவில் பாலகிருஷ்ணன் - லலிதா என்கிற தம்பதியினரும் வசித்து வருகின்றனர்.பாலகிருஷ்ணன் கட்டிட வேலை செய்து வருகிறார்.லலிதா தேதியூரிலிருக்கும் அங்கன்வாடி ஒன்றில் சமையல் ஊழியராக பணிபுரிந்து வருகிறூர்.இந்த தம்பதிக்கு  13 வயதில் மகள் இருக்கிறாள். 

ALSO READ 'டிக்டாக்' சுகந்தி கைது! பல பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு!

இந்நிலையில் பரத்-லலிதா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.இவர்களின் இந்த தெய்வீக காதல் விவகாரம் பரத்தின் வீட்டிற்கு தெரிய வர பெற்றோர்கள் கண்டித்ததோடு,மகனை எரவாஞ்சேரி அக்ரஹாரா பகுதியில் இருக்கும் உறவினரின் வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்துள்ளனர்.ஆனால் அப்போதும் இருவரும் தங்கள் காதலை தண்ணீர் ஊற்றி வளர்த்துக்கொண்டு தான் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில்,கடந்த மாதம் 26-ம் தேதியன்று பள்ளிக்கு சென்ற பரத் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதே நேரம் லலிதாவும் காணவில்லை என்பது தெரியவந்தது.உடனே எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பரத்தின் பெற்றோர் புகார் அளித்தனர்.கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் மேரி என்ற பெண் பரத்-லலிதா இருவரையும் ஆட்டோவில் அனுப்பியதாக தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த ஆட்டோ டிரைவர் தனபால் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அதில்  இருவரையும் பூந்தோட்டம் எனும் ஊரில் இறக்கி விட்டதாக தெரிவித்தார்.பின்னர் லலிதாவின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஒருவழியாக வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த பரத்-லலிதா ஜோடியை பிடித்தனர்.மேலும் 35 வயதான லலிதா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.பின்னர் அந்த 15 வயது சிறுவனை மீட்டு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ குடிபோதையில் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்து கலாட்டா செய்த அதிமுகவின் முன்னாள் எம்.பி.!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News