சாம்பியன்ஸ் டிராபி 2017: இலங்கையிடம் இந்தியா தோற்றது

Last Updated : Jun 9, 2017, 08:29 AM IST
சாம்பியன்ஸ் டிராபி 2017: இலங்கையிடம் இந்தியா தோற்றது  title=

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா-இலங்கை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்கள் குவித்தது. ஷிகார் தவான் சிறப்பான விளையாடி சதம் விளாசினார்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி 78 குவித்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி டக் அவுட் ஆனார். யுவராஜ் 7 ரன்களில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். 

பின்னர், ஷிகார் தவானுடன், டோனி ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷிகார் தவான் சதம் அடித்தார். 128 பந்துகளில் 125 ரன்கள் எடுத்த போது ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசிய பாண்டியா 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டோனி 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருப்பினும், 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் தோனி ஆட்டமிழந்தார். கடைசியில் ஜாதவ் 13 பந்துகளில் 25 ரன்கள் அடிக்க இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்கள் குவித்தது. 

இலங்கை அணி தரப்பில் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருப்பினும் மலிங்கா, லக்மல், பிரதீப் ஆகியோ தலா 70 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். 

இதனையடுத்து 322 ரன்கள் என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. திக்வெல்லா மற்றும் குனதிலகா தொடக்க ஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர். ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் திக்வெல்லா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

Trending News